மூத்த வக்கீல் ஜி . ராஜகோபால்— ஆகம பயற்சி பெற்றவர்களை நியமக்க வேண்டும்

மூத்த வக்கீல் ஜி . ராஜகோபால் கூறியதாவது :

தமிழக அரசு ஆகம விதிகளை பின்பற்றி அர்ச்சகர்களை நியமிக்கவில்லை .ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் ஏழாண்டு வேதங்கள் படித்திருக்க வேண்டும் வேதத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆனால் தமிழக அரசு இதையெல்லாம் பின்பற்றாமல் ஓர் ஆண்டு பயிற்சி பெற்றவர்களை நியமித்துள்ளது தவறானது ஆகம விதிகளை முழுவதும் பயிற்சி பெற்றவர்களை தான் அர்ச்சகர்களாக நியமிப்போம் என்று கடந்த 1972-ம் ஆண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளது ஆனால் தற்போது அதை மீறுவது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் ஆகமத்தில் பயிற்சிபெற்றவர்களை தான் நியமிக்க வேண்டும் .
இது பற்றி ஐகோர்ட்டில் விரிவாக வாதாட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்

You may also like...