மாணவி வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தவுடன் உடனுக்குடன் சுறுசுறுப்புடன் செயல்பட்ட ஸ்டேட் பப்ளிக் ப்ரசிகியூசிட்டர் அசன் முகமது ஜின்னா state pp jinna

சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தவுடன் உடனுக்குடன் சுறுசுறுப்புடன் செயல்பட்ட ஸ்டேட் பப்ளிக் ப்ராசிட்டர் அசன் முகமது ஜின்னா
சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய அவரது தந்தை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இன்று காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார் . அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அவரது முறையீட்டை ஏற்று நீதிபதி வழக்கை விசாரித்தபோது, அரசு தரப்பில் நீதிமன்றம் உத்தரவுப்படி மறு உடற்கூரய்வு முடிக்கப்பட்ட பிறகும், இன்னும் உடலை பெற்று கொள்ளவில்லை என்றும், அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் மனுதாரர் வாபஸ் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமலேயே மறு உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், தங்கள் தரப்பு மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும், உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்ய மனுதாரர் ராமலிங்கம் தர்ப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார். அதேசமயம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மறு பரிசீலினை செய்ய போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

You may also like...