Dr subbya murder case hanging for 7 accused

[8/4, 16:53] Sekarreporter: Dr. சுப்பைய்யா கொலை வழக்கில் இன்று (04.08.2021) தீர்ப்பு வழங்கிய முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி. அல்லி அவர்கள், குற்ற சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளார். அரசுதரப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி
தண்டனை விவரம் பற்றி இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார்.
தற்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் விஜயராஜ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வாதாடினார்.

தண்டணை விவரம்

A-1- பொன்னுசாமி, (ஆசிரியர்)
A-2 மேரி புஷ்பம், (ஆசிரியை)
A-3 பாசில், (வக்கீல்)
A-4 போரிஸ், (என்ஜினீயர்)
A-5 வில்லியம், (வக்கீல்)
A-6 ஏசுராஜன், (பட்டதாரி)
A-7 ஜேம்ஸ் சதீஷ்குமார், (அரசு மருத்துவர்)
A-8 முருகன், (சட்டக்கல்லூரி மாணவர்)
A-9 செல்வப்பிரகாஷ், (டிப்ளமோ படித்தவர்).

A1 பொன்னுசாமி,
A3 பாசில்,
A4 போரிஸ்,
A5 வில்லியம்,
A7 ஜேம்ஸ் சதீஷ்குமார்,
A8 முருகன்,
A9 செல்வப்ரகாஷ் ஆகியோருக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் தலா ரூபாய்.50000 அபராதம்.

A2 மேரி புஸ்பம் மற்றும் A6 ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா Rs.50,000 அபராதம்.

(10 எதிரி ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டதால் அவர் அரசு சாட்சி. ஆகவே அவருக்கு தண்டனை எதுவும் கிடையாது.)
[8/4, 16:53] Sekarreporter: மருத்துவர் மனைவி சாந்தி ((கண்ணீர் மல்க பேட்டி))

நானும் கணவரும் எப்போதுமே நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம். அது வீண்போகவில்லை.

தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

தீர்ப்பினால் கணவர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னுதாரணமாக இருக்கும்.

கணவர் சுப்பையா மரண வேதனை அனுபவித்த 9 நாட்களில் மணமாகாத எங்கள் மகள்களை நினைத்து கலங்கினார்

அவர் கலங்கியதற்கு ஆறுதலான தீர்ப்பு
[8/4, 16:53] Sekarreporter: பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குதண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் அபிராமபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுச்சாமியும் உரிமை கோரி வந்த நிலையில் அந்த நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியுள்ளது.

இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டதும். இதற்கு அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், வழக்கறிஞரான மகன் பாசில், என்ஜினீயரான மகன் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் ஜூலை 28 ம் தேதி முடிவடைந்த நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி அல்லி குற்றஞ்சாட்டப்பட்ட ஐய்யப்பன் தவிர மற்ற 9 பேர் குற்றவாளிகள் என அழைக்கப்படும் அறிவித்தார்.

9 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

குற்றவாளிகள் தரப்பில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

இதையடுத்து தண்டனையை அறிவித்த நீதிபதி அல்லி, குற்றவாளிகள்
பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், மற்றும் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் , முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு கொலை மற்றும் கூட்டுசதி பிரிவுகளில் இரட்டை தூக்கு தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்்
விதிப்பதாகவும் இதனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்
தீர்ப்பளித்தார். ஐயப்பன் என்பவர் அரசு சாட்சியானதால் அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.

பேட்டி :- 1.சாந்தி, டாக்டர் சுப்பையா மனைவி,
2. விஜயராஜ், அரசு தரப்பு வழக்குரைஞர்,

[8/4, 15:41] Sekarreporter: அரசு சிறப்பு வழக்கறிஞர் விஜய்ராஜ் பேட்டி

சாட்சிகள் மிரட்டலில் வழக்கு இழுத்தடிப்பு

தினசரி அடிப்படையில் வழக்கை நடத்த உத்தரவிட்டது

அதன்படி விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட உடனே உச்ச பட்ச தண்டனையை வலியுறுத்தினேன்

நல்ல தீர்ப்பு

புலன் விசாரணை அதிகாரிகளுககு நன்றி
[8/4, 15:41] Sekarreporter: மருத்துவர் மனைவி சாந்தி ((கண்ணீர் மல்க பேட்டி))

நானும் கணவரும் எப்போதுமே நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம். அது வீண்போகவில்லை.

தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

தீர்ப்பினால் கணவர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னுதாரணமாக இருக்கும்.

கணவர் சுப்பையா மரண வேதனை அனுபவித்த 9 நாட்களில் மணமாகாத எங்கள் மகள்களை நினைத்து கலங்கினார்

அவர் கலங்கியதற்கு ஆறுதலான தீர்ப்பு

You may also like...