பிரியதர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் முதலில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி வெற்றி பெற்றது செல்லும் என்றும், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பிரியதர்ஷினி தலைவராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தேவியின் மனு மீது நீதிபதிகள் புகழேந்தி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன்பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பிரியதர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் முதலில் அறிவிக்கப்பட்ட  காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி வெற்றி பெற்றது செல்லும் என்றும், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

You may also like...