Sagadevan Song Teacher: *தாய் எழுதிய டைரி குறிப்பு தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /*

[2/22, 09:16] Sagadevan Song Teacher: *தாய்
எழுதிய டைரி குறிப்பு

தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*
ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*
மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*
வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*
என் சிறுநீர் பை /*
பலம் இழந்திருக்கக்கூடும் /*
சில இடங்களில் /*
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*
இச்…….சீ என்று முகம் சுழிக்காதே /*
என் முந்தானையில் /*
உன் சிறுநீர் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*
மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*
என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ? இதை படித்து என் எண்ணம் அறிவாய் / என்னை அறிவாய்/ என்னை நேசிப்பாய் / என்ற நம்பிக்கையில் அல்ல* ஒவ்வொரு தாயின்/* உணர்வும் இதுதான் /
என்பதை நீ உணர வேண்டும் /*
பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
அழாதே பெண்மையை மதி /*
அதுபோதும் நன்றி மகனே/*🌷
படித்து கண் கலங்கிய வரிகள்…
அன்பு நெஞ்சங்களே…
தாய் தந்தையரை பரிதவிக்க செய்து விடாதீர்கள்..
[2/22, 10:18] Sekarreporter: 👍👍

You may also like...