Patty Jeganathan Mhc Advt: சேகர், கழக செயல் வீரர் அண்ணன் பழக்கடை ஜெயராமன் அவர்களின் அன்பு மகன். தலைவர் கலைஞர் அவர்கள் அன்பழகன் என்று பேராசிரியரின் பெயரை வைத்தார். அதன் பிறகு அன்பு என்று தலைவர்

[6/10, 18:36] Patty Jeganathan Mhc Advt: சேகர், கழக செயல் வீரர் அண்ணன் பழக்கடை ஜெயராமன் அவர்களின் அன்பு மகன். தலைவர் கலைஞர் அவர்கள் அன்பழகன் என்று பேராசிரியரின் பெயரை வைத்தார். அதன் பிறகு அன்பு என்று தலைவர் அழைப்பார். அருகில் இருந்தால் பேராசிரியர் சிரிப்பார். கழகத்தினர் எல்லாம் அன்பு அண்ணே என்று அழைப்பார்கள். கவர்ச்சியான சிரிப்பு. அவர் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்பினார்
நானும் பாரதியும் அவரை வீட்டில் பார்த்தோம். கிளம்பும் போது காபிடிபன் சாப்பிடாமல் போகக்கூடாது என்று அவருக்கே உண்டான உத்தரவு. மிகவும் அன்பானவர். தலைவரின் செல்லப்பிள்ளை. ஒரு தடவை மறியல் போராட்டம். கைது கூடாது என்று கோர்ட்டில் தடை. மறுநாள் அன்பை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்தலைவருக்கு கோபம். உடனே கிளம்பி எக்மோர் கமிஷனர் ஆபிஸ் எதிரில் நடுரோட்டில் மறியல் செய்து உட்கார்ந்து விட்டார். அன்பை விடுதலைசெய்யாவிட்டால் போகமாட்டேன்உடனே போலீசார் அன்பை அழைத்து வந்தார்கள். இது போன்று நிறைய உள்ளது. உரிமையோடு கண்டிப்பார். ஒரு முறை என்னை அறிவாலயத்தில் தளபதியின் முன்பு, “என்ன வக்கீல் நினச்சா வர்ரீங்க, எந்த வேலையும் செய்றது இல்லை. நல்லா இல்ல என்றார். நான் சாரிங்க என்றதும் சிரித்து விட்டார்.” அன்பு யாராவது உதவி கேட்டால் உடனே செய்வார். தலைவர் வளர்த்த அன்பு மறைந்தார் சேகர்.
[6/10, 18:38] Sekarreporter 1: 🍁

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version