SEKAR REPORTER Blog
நகராட்சி சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் AAG ஆஜராகி கடந்த 2021 டிசம்பர் மாதத்திலேயே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு புதிய கடைகள் கட்ட நகராட்சி முடிவெடுத்து அதற்கான நிதியும் அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; உரிய கால அவகாசம் வழங்கியும் மனுதாரர்கள் கடைகளை காலி செய்யாமல் நீதிமன்றத்தினை அணுகியுள்ளனர்; வாடகை பாக்கியும் வைத்துள்ளனர்; புதிய கடைகள் கட்ட ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து பணி ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது என்பதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுசென்று, காலி செய்ய கொடுக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.*
[5/27, 20:13] Sekarreporter: *திருவண்ணாமலை மாவட்டம் – திருவத்திபுரம் நகராட்சிக்கு சொந்தமான சிதிலமடைந்த கடைகளை இடித்துவிட்டு – தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் புதிய கடைகள் கட்ட வசதியாக, தற்போதுள்ள வாடகைதாரர்களை மே31ஆம் தேதிக்குள் காலி செய்ய கொடுக்கப்பட்ட நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில்,...