இந்த கருத்தரங்கிற்கு குறைவான வக்கீல்களே வந்திருந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘எதற்காக இந்த கருத்தரங்கத்தை சென்னையில் நடத்துகிறோம்?. இந்த தீர்ப்பாயத்தின் விவரம் மற்றும் புதிய சட்டங்களை வக்கீல்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மக்களுக்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என்பதற்காகத்தான். வாய்ப்புகள் கிடைக்கும்போது தவற விடக்கூடாது’’ என்று வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கினார்.
டெல்லியில் உள்ள தொலைதொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சார்பில் சென்னையில் ‘தொலைதொடர்பு, ஒலிபரப்பு மற்றும் சைபர் பிரிவுகளின் பிரச்சினை மற்றும் தீர்வுகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது. இதில் தலைமை விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி...