பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி தீர்ப்பு.

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுச்சாமியும் உரிமை கோரி வந்த நிலையில் அந்த நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்பாகியுள்ளது. இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன் பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யபட்டதும். இதற்கு அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பினை ஜூலை 28 ஆம் தேதி
சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி அல்லி குற்றஞ்சாட்டப்பட்ட ஐய்யப்பன் தவிர மற்ற 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்கள் குறித்து பிற்பகல் அறிவிக்கபடும் என நீதிபதி தெரிவித்தார்.

9 பேரும் குற்றவாளி என அறிவிக்கபட்டதை அடுத்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் குற்றவாளி தரப்பில் தண்டனை குறித்தும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

You may also like...