திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*

*திருநெல்வேலி திருமண்டல புதிய பேராயருக்கு முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை நேரில் வாழ்த்து!*

திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தின் புதிய பேராயராக பர்னபாஸ் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சிஎஸ்ஐ திருச்சபைகளுக்கு பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய பேராயரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டிலுள்ள பேராயர் இல்லத்தில் ராதாபுரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இன்பதுரை அதிமுக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றார்.
இந்நிகழ்வின் போது இன்பதுரையுடன் அதிமுக ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் கே பி கே செல்வராஜ் நெல்லை திருமண்டல பொருளாளர் ஏடிஜேசி மனோகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You may also like...