சென்னை பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தில் குளறுபடி – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவாளராக, முனைவர். ரீட்டா ஜான் என்பவரை நியமனம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக சேலத்தை சேர்ந்த நபர் சென்னை
[26/08, 20:09] Sekarreporter: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தில் குளறுபடி –
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவாளராக, முனைவர். ரீட்டா ஜான் என்பவரை நியமனம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக சேலத்தை சேர்ந்த நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேற்படி வழக்கு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி திருமதி மாலா அவர்கள் முன்னிலையில் இன்று 26.08.2025 அன்று பட்டியலிடப்பட்டிருந்தது.
மேற்படி சென்னை பல்கலைக்கழக பதிவாளர் நியமனம் தொடர்பாக மனுதாரர் தரப்பில் கோரி இருந்த தரவுகள் எதற்கும் சென்னை பல்கலைக்கழகத்தால் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என்றும், மேற்படி கேள்விகளுக்கு பதில் அளித்தால் குறிப்பிட்ட நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்றும் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கபட்டுள்ள பதிலை மேற்கோள் கட்டி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் உயர் கல்வித்துறைக்கு, முதன்மை செயலாளர் இல்லாத சூழ்நலையில் மேற்படி சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவாளர் நியமனம் நடைபெற்றுப்பாதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
உரிய முறையில் பதில் அளிக்காத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உயர் கல்வித்துறைக்கு, முதன்மை செயலாளருக்கு உத்தரவிடவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பதில்கள் திருப்திகரமாக இல்லை என்ற மனுதாரரின் வாதத்தை பதிவு செய்து, சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கபட்டுள்ள பதில் மனு மீதும், உரிய நேரத்தில் பதில் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தகவல் அறியும் உரிமை சட்ட, முதல் மேல் முறையீட்டு அதிகாரியிடம் மேல் முறையீடு செய்துகொள்ள மனுதாரருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
[26/08, 20:09] Sekarreporter: THE HON’BLE MRS.JUSTICE N. MALA *Item 17* WP.32741/2025 SANGAIAH vs
THE PRINCIPAL SECRETARY TO THE GOVERNMENT /
THE PUBLIC INFORMATION OFFICER /
THE FIRST APPELLATE AUTHORITY /