சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா ஆகியோரை கடந்த மே மாதம் பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு நியமித்தது. அதற்கு பிறகு தற்காலிக அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோரை நியமித்துள்ளது.

இந்நிலையில் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அடிசனல் பி.பி. என்று சொல்லக்கூடிய கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்க்ளாக 12 பேரை நியமித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக எம்.பாபு முத்து மீரான், கஸ்தூரி ரவிச்சந்திரன், ஆர்.முனியபராஜ், ஏ.கோகுலகிருஷ்ணன், ஏ.தாமோதரன், .இ.ராஜ் திலக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மதுரை கிளை வழக்குகளில் ஆஜராக கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக எஸ்.ரவி, இ.அந்தோணி சகாய பிரபாகர், ஆர்.எம்.எஸ்.சேதுராமன், ஆர்.மீனாட்சி சுந்தரம, ஏ.திருவடிகுமார், டி.செந்தில்முமார் ஆகியோரை நியமித்த்தும்.உத்தரவிடப்பட்டுள்ளது.

You may also like...