சென்னையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையிட்டை. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

  • சென்னையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையிட்டை. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகமாகி விட்டதாகவும், அதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் வகையில், தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் நீதிபதிகள் துரைசாமி, சத்யநாராயண பிரசாத் அமர்வில் முறையீடு செய்தார்.

    டெங்கு கொசு அதிகரிப்பை தடுக்கக்கோரி 2019ல் தொடர்ந்த வழக்கில், கொசு ஒழிப்பில் முறையாக நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை என்பதால், தாமாக முன் வந்து வழக்கை விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

    ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

  • You may also like...