Vadapalani temple order CORAM : THE HONOURABLE MR.JUSTICE N.ANAND VENKATESH Writ Petition No.18583 of 2021 N.G.Deivakadatcham … Petitioner -Vs-

W.P.No.18583 of 2021
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED : 06.09.2021
CORAM :
THE HONOURABLE MR.JUSTICE N.ANAND VENKATESH
Writ Petition No.18583 of 2021
N.G.Deivakadatcham … Petitioner
-Vs-
1 The Secretary to the Government
Municipal Administration and Water
Supply Department Government of Tamil Nadu
Secretariat Fort St. George Chennai – 600 009.
2 The Commissioner
Hindu Religious and Charitable Endowments
Department No. 119 Uthamar Gandhi Salai
Nungambakkam Chennai – 600 034.
3 The Commissioner
Greater Chennai Corporation Rippon Building
E. V. R. Road Chennai – 600003.
4 The Assistant Commissioner /
General Division Greater Chennai
Corporation Rippon Building E. V. R. Road
Chennai – 600003.
5 The Central Regional Deputy Commissioner
Greater Chennai Corporation
No. 36B Pulla Avenue Shenoy Nagar Chennai – 600030.
6 V. Periyasamy
The Executive Engineer Zonal Officer-10
Greater Chennai Corporation NO. 117 N. S.
K. Salai Kodambakkam Chennai – 600 024.
1 / 5
https://www.mhc.tn.gov.in/judis/

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி பெறாமல் கட்டுமானங்களை மேற்கொண்ட சென்னை.மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வடபழனியை சேர்ந்த என்.ஜி.தெய்வகடாட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வடபழனி நெற்குன்றம் பாதையில் அமைந்துள்ள 2000 சதுர அடி நிலம் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அதில் கட்டுமானங்களை மேற்கொள்ள அறநிலையத்துறையிடம் அனுமதி பெறாமல், சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல செயற் பொறியாளர் வி.பெரியசாமி 47 லட்ச ரூபாய் மதிப்பிலான இரு கட்டிடங்களை கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கட்டடங்களில் அம்மா உணவகம், நியாய விலை கடை ஆகியவை இயங்கி வருவதாகவும், சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்திருப்பதாக பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குத்தகை காலம் 2015ஆம் ஆண்டு முடிந்த நிலையிலும், அம்மா உணவகமும், நியாய விலை கடையும் தொடர்ந்து இயங்கிவருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பொறியாளர் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு, இந்துசமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தெய்வகடாட்சம் அளித்த புகாரில் விசாரணை தொடங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு உள்ளான பொறியாளர் பெரியசாமி விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, விசாரணையை முடித்து சட்டத்திற்குட்பட்டு 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

You may also like...