தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மதத்தின் பெயரால் நீர்நிலைகள் ஆக்கிரமிப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டச்சிபுரம் தாலுகாவில் உள்ள சென்னகுன்னம் கிராமத்தில் நீர்நிலை மற்றும் மந்தை நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சேட்டு மற்றும் கனிக்கண்ணன் ஆகியோர் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்....