நேரத்தில் வெளியிட உள்ளோம் என அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞரமான பாலு பேட்டி*

*பாமக விதியின் படியும், கட்சி சட்டத்தின் படியும், கட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர்களுக்கு மட்டுமே உள்ளது*

*மருத்துவர் ஐயாவின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது ; ஐயாவின் அறிவிப்பு பாமக கட்சியை கட்டுப்படுத்தாது*

*அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் கிடையாது, அதில்* *விருப்பமும் கிடையாது, நாட்டமும் கிடையாது அன்புமணி உளவு பார்த்து இருந்தால் இப்படி ஒரு சூழல் இருந்திருக்காது*

*பாமகவில் நிலவி வந்த பல்வேறு குழுப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் நல்ல முடிவு கிடைத்துள்ளது ; தேர்தல் ஆணையம் கடிதத்தை உரிய நேரத்தில் வெளியிட உள்ளோம் என அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞரமான பாலு பேட்டி*

oplus_0

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் வெளியே அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.

பாமகவின் செயல் தலைவர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அன்புமணி நீக்கப்பட்டது தொடர்பாக அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;

மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் குறித்து கூறிய கருத்துக்கள் தொடர்பாக பாமக சார்பாக விளக்கத்தை வழங்க உள்ளேன்.

பாமக விதியின்படியும், கட்சி சட்டத்தின் படியும் கட்சி நிர்வாக பணிகளை கட்சி பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கட்சி விதிகளின்படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கவில்லை எனவும் நீக்கம் செய்வது கூட்டம் நடத்துவது எந்த முடிவுகளாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இன்றைக்கு மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தனர்.

ஐயாவின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது அன்புமணி அவர்கள் தொடர்ந்து தலைவராக வருகிறார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் கட்சி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்தல் நெருங்கி வரக் கூடிய வேளையில் கட்சியின் அமைப்பு தேர்தலை நடந்த கூடிய சூழல் இல்லை எனவும் எனவே கட்சித் தலைவர் செயலாளர் பொருளாளர் 3 பேரின் பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஒருமனத்தோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்திற்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை தெரிவித்தோம். எங்களது விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆய்வு செய்து பாமகவின் தலைவர் செயலாளர் பொருளாளர் பதவி காலத்தை பொது குழுவின் தீர்மானத்தின் படி 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என கூறினார்.

பாமகவின் தலைவராக அன்புமணி அவர்களும் பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமா அவர்களும் தொடர்கிறார்கள்.

மருத்துவர் அய்யா வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு கட்சி விதிகளின்படி தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவு அடிப்படையில் செல்லத்தக்கது அல்ல என தெரிவித்தார்.

பாமக கட்சியை மருத்துவர் அய்யாவின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது எனவும்
பாமக நிறுவனர் ஐயா தான் அதே வேலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பாமக தலைவர் செயலாளர் பொருளாளர் என்பது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வடிவேல் ராவணன் திலகபாமா அவர்கள் தான் எனவும்
இதைத் தவிர நான் தான் தலைவர் பொருளாளர் செயலாளர் என வெளியிடக்கூடிய அறிவிப்புகள் கட்சி விதிகளுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எதிரானது அதை அடிப்படையாகக் கொண்டு பாமக நிர்வாகிகள் என்ற அடிப்படையில் எந்த செய்தியை வெளியிட வேண்டாம் என ஊடகத்திடம் கேட்டுக் கொண்டார்.

மற்ற பணிகள் உள்ள உறுப்பினர்களும் மாற்றப்பட்டதாகும் வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுள்ளது.

இன்றிலிருந்து தலைவர் பொருளாளர் செயலாளர் என்பதில் குழம்பிக் கொள்ள வேண்டாம் தேர்தல் ஆணையம் முறையாக எங்களுக்கு தலைவர் செயலாளர் பொருளாளர் என்ற பதவிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. பதவி காலத்தை நீட்டித்து உள்ளது. அந்த அடிப்படையில் ஐயா அறிவிப்பு கட்சி எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என கூறினார்.

*தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதத்தை வெளியிடலாமே என்ற கேள்விக்கு*

அது குறித்து விரைவில் உரிய நேரத்தில் வெளியிடுவோம் என தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக மருத்துவ அய்யா பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய கருத்துக்கு கருத்து சொல்வது அழகாக இருக்காது முறையாக இருக்காது என தெரிவித்தார்.

*ஒட்டு கேட்பு கருவி மூலம் தன்னை கண்காணித்தாக கூறி உள்ளார் ராமதாஸ் என்ற கேள்விக்கு*

அன்புமணி ராமதாஸ் உடன் நெருங்கி பழகி இருக்கிறேன் அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் கிடையாது அதில் விருப்பமும் கிடையாது நாட்டமும் கிடையாது

அன்புமணி உளவு பார்த்து இருந்தால் இப்படி ஒரு சூழல் இருந்திருக்காது எனவும்
உளவு பார்த்ததாக கூறப்படுவது தவறு எனவும் கூறினார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாரும் கணிக்க முடியாது

கட்சியின் செய்தி தொடர்பாளராக தேர்தல் ஆணையம் கூறிய கருத்துக்களை உங்களிடம் கூற வந்துள்ளேன்

பாமகவின் கொள்கைகளை அன்புமணி தான் நிறைவேற்றி வருகிறார்

நாங்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆளும் கட்சி திணறி வருகிறார்கள்

அன்புமணி பயணம் எழுச்சி பயணமாக அமைந்துள்ளது.

*கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறித்தான கேள்விக்கு*

கேவியட் மனு போட வேண்டியது நாங்கள் தான் எனவும் அந்த மனுவில் கொடி கட்சி சின்னம் குறித்து எதுவும் கூறவில்லை

கட்சி விதிப்படி சட்டத்தின் படி யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

பாமகவில் நிலவி வந்த பல்வேறு குழப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் நல்ல முடிவு கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com