தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு

கோவில்களில் அறங்காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாகவும், பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அறங்காவலரகள் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளஙகளில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறையை முடிக்க அவகாசம் வழங்கப்படும் என்றும் அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், 10 மாவட்டங்களில் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட வாரியான தேர்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மீதமுள்ள 29 மாவட்டஙகளில் விரைவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8 ம் தேதிக்குள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...