உதயநிதி கோர்ட்டில் ஆஜர்

யூடியூபர்ஸ் மதன் ரவிச்சந்திரன் மாரிதாஸ் அவர் மீது உதயநிதி ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி உதயநிதி ஸ்டாலின் வாக்குமூலம் அளித்தார் இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது இந்த வழக்கு பற்றி அவரது வக்கீல் விவேக் கூறும்போது மதன் ரவிச்சந்திரன் மாரிதாஸ் ஆகிய இருவரும் உதயநிதி ஸ்டாலின் பற்றியும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்கள் இதனால் அவர்கள் மீது அவதூறு வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார் அதில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார் இந்த வழக்கில் யூடியூபர்ஸ் இருவருக்கும் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது இந்த வழக்கு விசாரணையை வருகிற 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இது தவிர யூடியூபர்ஸ் மீது சிவில் வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்

You may also like...