Skip to content

SEKAR REPORTER

  • Contact Us

SEKAR REPORTER

Court News from Madras High Court

  • Contact Us
  • Uncategorized

இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.

by Sekar Reporter · Published April 18, 2022 · Updated April 18, 2022

இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நேற்று அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.
விழாவில் ஆர்.எஸ்.வெங்கட்ராமன் தேவார இறை வணக்கம் பாட, கவிஞர் அகரமுதல்வன் வரவேற்றார். காலங்களுக்கிடையில் மா.அரங்கநாதன் என்ற தலைப்பில் பெங்களூரு கிறித்து நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் பழனி. கிருஷ்ணசாமி உரை நிகழ்த்தினார். விருதாளர்களை ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார். விழாவில், இந்திய இலக்கிய சிற்பிகள்: மா.அரங்கநாதன் என்ற நூலை வெளியிட்டும், குடவாயில் பாலசுப்பிரமணியன், ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இலக்கிய விருதுகளை வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘‘ கலை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்துறையில் ஆராய்ச்சி கண்ணோட்டம் உடையவை மா.அரங்கநாதனின் படைப்புகள். அதில் சிறந்த படைப்பு அவரது மகன் அரங்க.மகாதேவன். கவிதைகளையும், படைப்புகளையும் அனுபவித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளனின் பங்களிப்பு ஒரு சதவீதம் என்றால் எஞ்சிய 99 சதவீதத்தை வாசகர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அந்த 99 சதவீதத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால்  நல்ல படைப்பு இல்லை என முத்திரை குத்தி விடுகின்றனர். வாசகர்களை எவன் ஒருவன் யோசிக்க, சிந்திக்க வைக்கிறானோ அவனே உண்மையான படைப்பாளி. இலக்கிய உலகுக்கு புதிய பரிணாமங்களை, நவீனத்தை, வாழ்வியலை, தெளிவான பாதையை அளித்தவர் மா.அரங்கநாதன் என புகழாரம் சூடினார். விழாவில்  பங்கேற்றவர்களை நீதிபதி அரங்க.மகாதேவன் பொன்னாடை அணிவித்தும், நினைவுப்பரிசு வழங்கியும் கவுரவித்தார். குடவாயில் பாலசுப்ரமணியன், டிராட்ஸ்கி மருது ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.  விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.  கவிஞர் சண்முகம் நன்றி கூறினார்.

 

You may also like...

  • என் நெஞ்சுக்கு நெருக்கமான நீதி அறிஞர் கலைஞரால் “Winson” என்று அழைக்கப்பட்ட “Wilson”

    என் நெஞ்சுக்கு நெருக்கமான நீதி அறிஞர் கலைஞரால் “Winson” என்று அழைக்கப்பட்ட “Wilson”

    June 13, 2025

     by Sekar Reporter · Published June 13, 2025

  • [5/31, 14:17] Sekarreporter 1: https://youtu.be/Yfah17vlMRs [6/1, 08:15] Sekarreporter 1: [5/31, 15:27] Meera Bar Bench: https://www.barandbench.com/news/when-imputations-and-gradings-are-made-we-damage-the-very-institution-justice-sanjay-kishan-kaul-on-criticism-of-supreme-court [6/1, 08:14] Sekarreporter 1: 🍁🍁🍁

    [5/31, 14:17] Sekarreporter 1: https://youtu.be/Yfah17vlMRs [6/1, 08:15] Sekarreporter 1: [5/31, 15:27] Meera Bar Bench: https://www.barandbench.com/news/when-imputations-and-gradings-are-made-we-damage-the-very-institution-justice-sanjay-kishan-kaul-on-criticism-of-supreme-court [6/1, 08:14] Sekarreporter 1: 🍁🍁🍁

    June 1, 2020

     by Sekar Reporter · Published June 1, 2020

  • Horse registration row: MRC slapped with Rs 1 lakh fine – https://www.newindianexpress.com/cities/chennai/2020/nov/24/horse-registration-row-mrc-slapped-with-rs-1-lakh-fine-2227237.html

    Horse registration row: MRC slapped with Rs 1 lakh fine – https://www.newindianexpress.com/cities/chennai/2020/nov/24/horse-registration-row-mrc-slapped-with-rs-1-lakh-fine-2227237.html

    November 24, 2020

     by Sekar Reporter · Published November 24, 2020

Follow:

  • Next story தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு பாராட்டு விழா
  • Previous story மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

  • sekarreporter1: https://x.com/pwilsondmk/status/1934523542277853236?s=46 [16/06, 14:02] sekarreporter1: The summons issued by ED to Mr. Arvind Datar, Senior Counsel to come for
  • Mha Ec Gobu: #வழக்கறிஞர்கள் #சமூகநீதிப்பேரவை #சார்பில் #ஆர்ப்பாட்டம். வழக்கறிஞர்
  • Biodata of HONOURABLE SRI JUSTICE K.SURENDER
  • Quashed MR.JUSTICE  P.VELMURUGAN Crl.O.P.No.14103 of 2025 — 1.Muruganandam 2.Manimaran             .. Petitioners
  • Murugan conference MR.JUSTICE B.PUGALENDHI W.P.CRL.(MD)Nos.110 and 185 of 2025 and WPMPCRL(MD)Nos.26 and 47 of 2025 in WPCRL(MD)No.110 of 2025 Hindu Munnani Rep.by its State Secretary

More

Recent Posts

  • sekarreporter1: https://x.com/pwilsondmk/status/1934523542277853236?s=46 [16/06, 14:02] sekarreporter1: The summons issued by ED to Mr. Arvind Datar, Senior Counsel to come for
  • Mha Ec Gobu: #வழக்கறிஞர்கள் #சமூகநீதிப்பேரவை #சார்பில் #ஆர்ப்பாட்டம். வழக்கறிஞர்
  • Biodata of HONOURABLE SRI JUSTICE K.SURENDER
  • Quashed MR.JUSTICE  P.VELMURUGAN Crl.O.P.No.14103 of 2025 — 1.Muruganandam 2.Manimaran             .. Petitioners
  • Murugan conference MR.JUSTICE B.PUGALENDHI W.P.CRL.(MD)Nos.110 and 185 of 2025 and WPMPCRL(MD)Nos.26 and 47 of 2025 in WPCRL(MD)No.110 of 2025 Hindu Munnani Rep.by its State Secretary

SEKAR REPORTER © 2025. All Rights Reserved.

Powered by  - Designed with the Hueman theme

Call Now ButtonCALL ME
Go to mobile version