அன்னிய மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அன்னிய மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மரங்களை வெட்டுவதற்கான விருப்பஙக்ளை கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் , யாரும் விருப்பம் தெரிவிக்காததால் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பிற மாநில அதிகாரிகளையும் அழைத்து அயல்நாட்டு மரங்களை அகற்ற ஆலோசனைகள் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அயல்நாட்டு மரங்களை அகற்றும் வழக்கில் நான்காண்டுகளாக முழுமையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்படுவதாக கூறி, அறிக்கையில் திருப்தி இல்லை என கேள்வி எழுப்பினர். 700 ஹெக்டேர்களில் அயல்நாட்டு மரங்கள் இருப்பதாக உயர் நீதிமன்ற குழு காண்டறிந்துள்ளதகவும், ஆனால் அந்த குழுவை விவரங்கள் கேட்டவில்லை என சுட்டிக்காட்டி, இதுபோன்ற அறிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றும், ஆக்கப்பூர்வமான பணியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். முன்னோடி திட்டத்தை தொடங்கவே 8 ஆண்டுகள் என்றால், அகற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் எனவும் வியப்பை வெளிப்படுத்தினர்.

தேவையற்ற மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை எனவும், அதனால் தான் இதுவரை ஒரு ஏக்கரில் கூட அகற்ற முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.

பின்னர் விரிவான தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது .

இதற்கிடையே தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் அதிகாரியை இடமாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அவரது சொந்த விருப்பத்திலேயே இடமாற்றத்தில் செல்வதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்த நீதிபதிகள், வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் தேவைப்படும்போது உதவ வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.

You may also like...