Supremecourt Advt Gs Mani: ஆழ்துளைக் கிணற்று விபத்து விவகாரத்தில் கடந்த ஆண்டு சிறுவன் சுஜித் விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்ததை தொடர்ந்து. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜிஎஸ் மணி தாக்கல் செய்த

[2/3, 11:48] Supremecourt Advt Gs Mani: ஆழ்துளைக் கிணற்று விபத்து விவகாரத்தில் கடந்த ஆண்டு சிறுவன் சுஜித் விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்ததை தொடர்ந்து. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜிஎஸ் மணி தாக்கல் செய்த அந்த மனுவானது இன்றையதினம் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அருண் மிஸ்ரா மற்றும் எம் ஆர் ஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ஜிஎஸ் மணி ஆஜராகி, ஆழ்துளை கிணறுகள் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு 16 விதிமுறைகளை வகுத்து ஆழ்துளை கிணற்று விபத்து மற்றும் மரணங்களை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் அதை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதனை அடுத்து 2011 முதல் 2019 வரை சுமார் வருடத்திற்கு 50 ஆழ்துளை கிணற்று உயிரிழப்புகள் நடந்தேறியது மத்திய அரசின் அறிக்கை படி சுமார் 50 உயிரிழப்புகள் கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் நடந்திருக்கிறது என்றும் வாதம் வைக்கப்பட்டது. அதனால் உச்ச நீதிமன்றம் தமிழக மற்றும் மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்கலுக்கும் நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்து ஆழ்துளை கிணற்று விபத்து மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு. மத்திய மாநில அரசுகளுக்கு உடனடியாக உச்ச நீதிமன்ற 2010 விதிமுறைகளை பின்பற்றி இனி ஒரு ஆழ்துளை கிணறு சம்பவங்களும் உயிரிழப்புகளும் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்றைய தினம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அனைத்து மாநில யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீசு பிறப்பித்து 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
[2/3, 12:45] Sekarreporter 1: 👍🏽

You may also like...