Sc dismissed savuku sanker case
சவுக்கு சங்கர் மனு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
“தனது ஒரே ஒரு பேட்டிக்காக தனக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும்” என்று சவுக்கு சங்கர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
“குற்றப்பத்திரிகைகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லியும் அதை தமிழ்நாடு அரசு செய்யவில்லை” என சவுக்கு சங்கர் சார்பில் கூறிய போது, “குற்றப்பத்திரிகைகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை சட்டத்திற்கு உட்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்று தான் சொன்னோம் என தெளிவுபடுத்திய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்