Sasikala relative bail dismissed

சசிகலா உறவினரான இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் சேலத்தில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கித் தருவதாகக் கூறி இளவரசியின் மருமகனான ராஜராஜன் தன்னிடமிருந்து சுமார் 5 கோடி பெற்றுக்கொண்டு சீட்டு வாங்கி தராததால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாகவும் அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பணம் கொடுத்தது தொடர்பாக எந்த ஆவணங்களும் முறையாக இல்லாததால் இளவரசியின் மருமகனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்

You may also like...

Call Now ButtonCALL ME