Murugavel Advt Admk: முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் மாவட்டம் என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற்று நங்கவள்ளி, வனவாசி, பேளூர்,

[3/16, 19:03] Murugavel Advt Admk: முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் மாவட்டம் என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற்று நங்கவள்ளி, வனவாசி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றக் கூடிய பெரும்பான்மை இருக்கின்றது என்ற காரணத்தினாலும் கடந்த 4.3. 2022 அன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காத சூழ்நிலையிலும், எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழாத சூழ்நிலையிலும், மிகப்பெரிய அரசியல் உள்நோக்கத்தோடு ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடும் இந்த நான்கு பேரூராட்சிகளின் தேர்தல் அலுவலரான, பேரூராட்சி செயல் அலுவலர் நான்கு பேரும் ஒரே காரணத்தைச் சொல்லி பின் தேதி குறிப்பிடாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது என்ற பொதுவான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வில் இந்த நான்கு பேரூராட்சிகளின் வெற்றி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பேரூராட்சி பிரதிநிதிகளின் சார்பாக ஆர்.எம். பாபு முருகவேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வில் வந்தது மனுதாரர்களின் சார்பாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் பாபு முருகவேல் சார்பாகவும் முன்னாள் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திரு. விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார் அரசு தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் சிவசண்முகம் மற்றும் தமிழக அரசின் தலைமை குற்றிவியல் வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்

சேலம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் மறைமுக தேர்தல் நாளன்று தேர்தல் அலுவலரின் மேஜையை சுற்றி நின்று கோஷம் எழுப்பினர் அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது என்றும் அதனால் தேர்தலை தள்ளி வைத்தோம் என்றும் எழுத்துப்பூர்வமான பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர் அதை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் வரும் 26ம் தேதி குறிப்பிட்டபடி மறைமுக தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும், எந்த காரணம் கொண்டும் தேர்தல் தள்ளி வைக்கக்கூடாது, ஒரு சிறப்பு அலுவலரை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கடந்த 4.3.2022 அன்று பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சிகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து வரும் 28.3..2022 அன்று வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறது.

தகவலுக்காக,
ஆர்.எம். பாபு முருகவேல்,
கழக செய்தி தொடர்பாளர்,
கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்.
[3/16, 19:07] Sekarreporter: சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், பேரூராட்சி மறைமுக தேர்தலில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவும், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://sekarreporter.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/

You may also like...