Judge tickaraman quashed case ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்து
அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஏ.டில்லிபாபு என்பவர் ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியதாக தெரிவித்திருந்தார். ஆனால், கோவில் இணைய தளம் வாயிலாக பக்தர்களிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி பிரிவு இணை ஆணையர் கவிதா நன்கொடை வசூல் செய்து வைத்துக்கொண்டு, அரசு நிதியிலும் முறைகேடு செய்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின்படி, இணை ஆணையர் கவிதா உள்ளிட்டோர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில இணை ஆணையர் கவிதா வழக்கு தொடர்ந்திருந்தார் . வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன், புகாரை சரியாக ஆய்வு செய்யாமல், போலீசாரை வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அரசு பணி செய்யும் அதிகாரிகள் மீது இதுபோல வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புகார் கொடுத்த டில்லிபாபு, கோவிலுக்கு சொந்தமான கடையில் உள்வாடகையில் இருந்துள்ளார். அவரை கடையில் இருந்து வெளியேற்றியதால், உள்நோக்கத்துடன் இந்து புகாரை கொடுத்துள்ளதாகவும், அரசு ஊழியர்கள் தங்களது பணியை எந்த ஒரு பயமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் மீது இதுபோல வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, சிவகாஞ்சி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். கோவில் புதுப்பிக்க பக்தர்களிடம் நன்கொடை வசூலித்ததாக குற்றம்சாட்டு குறித்து,உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக அறிக்கை கொடுத்தால், அதன்படி. செயலாளரும், ஆணையரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று
நீதிபதி கூறியுள்ளார்.

You may also like...