sekarreporter1: https://youtu.be/zwB15VxEsUI?si=YD1c8E8GbKGtO1CX [20/03, 22:09] sekarreporter1: பாஜக மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி முன்னிலையில் தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தமிழக முதல்வரின் முதன்மை மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தனி செயலாளர்களை மாற்றக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.
[20/03, 21:17] sekarreporter1: https://youtu.be/zwB15VxEsUI?si=YD1c8E8GbKGtO1CX
[20/03, 22:09] sekarreporter1: பாஜக மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி முன்னிலையில் தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தமிழக முதல்வரின் முதன்மை மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தனி செயலாளர்களை மாற்றக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் தனது மனுவில், மு.க. ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தில் நீண்டகாலமாக (5 ஆண்டுகளுக்கும் மேலாக) பதவி வகித்து வரும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள்—
டாக்டர் பி. உமாநாத், ஐஏஎஸ் (Secretary-I),
டாக்டர் எம். எஸ். சண்முகம், ஐஏஎஸ் (Secretary-II),
திருமதி அனு ஜார்ஜ், ஐஏஎஸ் (Secretary-II)—
தொடர்ந்து பதவி வகிப்பது தேர்தல் நடுநிலைத்தன்மையை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதன் பின்னர் அமலுக்கு வரும் Model Code of Conduct (MCC) விதிகளின்படி, ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி அரசின் அதிகாரங்களை, நிர்வாக அமைப்பை, அரசுப் பணியாளர்களை அல்லது பொது வளங்களை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படை நெறிமுறையாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
முதலமைச்சரின் அலுவலக செயலாளர்கள், குறிப்பாக Secretary-I பதவியில் உள்ள டாக்டர் பி. உமாநாத், ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும்,
இத்தகைய நிர்வாக இணைப்புகள் தேர்தல் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் ஏற்படும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்றும்,
இதன் மூலம் சமநிலை வாய்ப்பு (level playing field) பாதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பதுடன், Dravida Munnetra Kazhagam (DMK) கட்சியின் தலைவராகவும் இருந்து, வேட்பாளர்களை தேர்வு செய்து A & B படிவங்களில் கையெழுத்திடும் முக்கிய அரசியல் பொறுப்பையும் வகிப்பதால், அவருக்கு நேரடியாக இணைந்த செயலாளர்கள் நீண்டகாலமாக பதவி வகிப்பது தேர்தல் நடுநிலைத்தன்மைக்கு எதிரான சூழலை உருவாக்கும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புகாரில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
முதலமைச்சர் அலுவலகத்தின் செயல்பாடு மற்றும் அதிகார வரம்பை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
செயலாளர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து விரிவான அறிக்கை பெற வேண்டும்.
தேர்தல் நடுநிலைத்தன்மை பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக மாற்றம் செய்ய அல்லது தற்காலிகமாக விடுவிக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக Secretary-I பதவியில் உள்ள டாக்டர் பி. உமாநாத், ஐஏஎஸ்-ஐ தேர்தல் காலத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு (Observers) முதலமைச்சர் அலுவலக செயல்பாடுகளை கண்காணிக்க தனிப்பட்ட உத்தரவு வழங்க வேண்டும்.
முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் அல்லது காவல்துறைக்கு எந்தவித உத்தியோகபூர்வ/அனுதாப/தொலைபேசி வழி தலையீடும் நடைபெறாதவாறு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
இந்த புகார் எந்த தனிநபரையும் குறிவைத்து அல்லாது, பொதுநலன் கருதி மற்றும் தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது என பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் சட்டரீதியாக மட்டுமல்லாமல், பொதுமக்களின் பார்வையிலும் முழுமையாக நியாயமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
அதற்காக உயர்மட்ட நிர்வாக அமைப்புகளின் பங்கும் பரிசீலிக்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது புகார் பரிசீலிக்கப்படவில்லை என்றாலும் அல்லது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும் சென்னை உயர்நீதிமன்றத்தையோ அல்லது தில்லி உயர்நீதிமன்றத்தையோ அல்லது உச்சநீதிமன்றத்தையோ நாடி ரீட் மனு தாக்கல் செய்து உரிய நிவாரணம் பெற இருப்பதாக பாஜக வழக்கறிஞர் ஏற்காடு A. மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.