பெண் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

[17/12, 13:47] Sekarreporter: [17/12, 13:46] Sekarreporter:

[17/12, 13:46] Sekarreporter: 👍
[17/12, 16:54] Sekarreporter: https://youtu.be/UxXhwIqzHFE?si=AgD-uCDrL6Y9sFmu
[18/12, 07:45] Sekarreporter: வழக்குகளை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 1 ம் தேதி முதல்
அனைத்து நீதிமன்றங்களிலும் இ பைலிங் முறையில் மட்டுமே வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்குகளை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதில் பல்வேறு சிரமங்களை வழக்கறிஞர்கள் சந்திப்பதாகவும், வழக்கு தாக்கல் செய்யப்படும் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி இல்லாத காரணத்தில் இ பைலிங் முறையில் வழக்குகள் மிகவும் கால தாமதமாக தாக்கல் செய்யப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் என இரண்டு நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

தங்களுடைய கோரிக்கையான நேரிலும், ஆன் லைன் மூலம் என இரு வகைகளிலும் வழங்கு மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும், படிபடியாக இ பைலிங் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்ற தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com