கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு?
- கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு?
▪️ சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள்:
விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி
▪️ இழப்பீட்டை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்:
பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு
▪️ பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுக்கள்:
சென்னை அமர்வில் இது தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்களையும் அதனுடன் இணைத்து விசாரிக்க புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உத்தரவு