நீதிமன்றங்களில் ஏ4 அளவிலான தாள்களை பயன்படுத்துவது குறித்து அறிவிப்பாணை வெளியிடுவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நீதிமன்றங்களில் ஏ4 அளவிலான தாள்களை பயன்படுத்துவது குறித்து அறிவிப்பாணை வெளியிடுவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஜிட்டின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
நீதிமன்றங்களில் வழக்குகளுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வெள்ளை மற்றும் பச்சை நிற தாள்கள் தேவைப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் காகிதங்கள் தயாரிப்பதற்காக 15 மில்லியன் டன் மரங்கள் வெட்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு காகிதத்தை தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க உயர் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் காகிதம் இல்லாத மனு தாக்கல் முறையை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றமும் இதை வலியுறுத்தியுள்ளதாகவும், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிலும் நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் இதுபோன்ற இ-பைலிங் முறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாட்டில் இ-பைலிங் முறை ஏற்கனவே கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும், ஏற்கனவே மனு தாக்கல் செய்யும் முறையிலிருந்து இ பைலிங் முறைக்கு மாறுவது படிப்படியாகத்தான் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இ-பைலிங் முறை தொடர்பாக மநுதாரர் வீடியோ ஒன்றை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதால், அதை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உருவாக்கி நீதிமன்ற பதிவாளரிடம் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்படும் தாள்கள் ஒரே மாதிரியான ஏ4 அளவில் இருப்பது தொடர்பாக அறிவிப்பாணை வரும் என்று நீதிமன்றம் எதிர்பார்ப்பதாகவும், உரிய அறிவிப்பாணை விரைவில் வரும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழ்க்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...