நீதிபதி அனிதா சுமந்த் , senthil kumar ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது பேருந்து நிலையம் கட்டப்படும் நிலம் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தனர்.

வேதாரண்யத்தில் கட்டப்பட்ட வரும் புதிய பேருந்து நிலைய இடம் கஸ்தூரிபா கன்யா குருகுல கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வேதாரண்யம் கஸ்தூரிபா கன்யா குருகுலத்துக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டதாக அக்கல்வி நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்தார்

அந்த வழக்கு மனு தனி நீதிபதியால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து கஸ்தூரிபா கன்யா குருகுலம் சார்பில் சொக்கலிங்கம் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கு இன்று காலை நீதிபதி அனிதா சுமந்த் , senthil kumar ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது பேருந்து நிலையம் கட்டப்படும் நிலம் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் அந்த உத்தரவில், மேற்படி பேருந்து நிலையம் கட்டப்படும் இடம் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என்றும். மேலும்
பொது மக்களின் பயன்பாட்டிற்காக பஸ் நிலையம் பகுதி கட்டப்பட்டு வருவதால் , 2013 நில எடுப்பு சட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அதே வேளையில், நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்துவதற்கு முன்பு, தகுந்த நஷ்டஈடு தொகையை கல்வி நிறுவனத்திற்கு வழங்கிய பின்னர் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடரலாம் என உத்திரவிட்டனர்.

2013 நில எடுப்பு சட்டபடி அரசு கல்வி நிறுவனத்திற்கு மூன்று மடங்கு நஷ்டஈடு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவில், குறிப்பிடப்பட்டு உள்ளது

You may also like...

Call Now ButtonCALL ME