நில அபகரிப்பு குறித்த புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி, மறைமுகமாக அபகரிப்புக்கு துணை போவதாக தொடரப்பட்ட வழக்கில்,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை இயக்குனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நில அபகரிப்பு குறித்த புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி, மறைமுகமாக அபகரிப்புக்கு துணை போவதாக தொடரப்பட்ட வழக்கில்,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை இயக்குனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,காஞ்சிபுரம் மாவட்டம்
பெருங்களத்தூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான 7 சென்ட் நிலம் உள்ளதாகவும்,தனது இடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்தை சென்னை பம்மலை சேர்ந்த சுனில் போத்ரா என்பவர் கடந்த 2009 ம் ஆண்டு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுனில் போத்ரா தனது இடத்திற்கு செல்ல ஏதுவாக இருந்த பொது பாதையை
அபகரித்ததால், தாம்பரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில், பொது பாதையை பயன்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியை 2017 ல் பெற்றுள்ளதாகவும்,ஆனால்,
,கடந்தாண்டு தன்னுடைய இடம் மற்றும் பொதுப்பாதை அனைத்தும் அபகரிக்கப்பட்டு பிளாட்களாக மாற்றி விற்பனை செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மறைத்து சட்டவிரோதமாக பிளாட்க்கான ஒப்புதல் வாங்கியுள்ளதாகவும்,இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போய் உள்ளதாக தெரிவித்துள்ளார். நில அபகரிப்பு புகாரை அதிகாரிகள் அலட்சிப் படுத்துவதாக கூறியுள்ளார்.
தன்னுடைய இடத்திற்கு தன்னுடைய அனுமதி இல்லாமல் வழங்கப்பட்ட பிளாட்க்கான ஒப்புதலை ரத்து செய்யக்கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும், சம்மந்தப்பட்ட தன்னுடைய இடத்தை மூன்றாம் நபர் பெயரில் பத்திரப் பதிவு செய்யக் கூடாதென படப்பை சார் பதிவாளரிடமும் மனு அளித்தும்,
புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்..
தன்னுடைய இடத்தை அபகரிக்க அரசு அதிகாரிகள் மறைமுகமாக துணை போயியுள்ளதாகவும், தன்னுடைய மனுவை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை இயக்குனர் உள்ளிட்டோர் விசாரிக்கவும், சம்மந்தப்பட்ட இடத்தை பிளாட்கள் போடுவதற்கு வழங்கப்பட்ட ஒப்புதலை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டுமென மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை என்றும் தெரிவித்தார். அதிகாரிகள் கடமையை செய்யத் தவறுவதன் காரணத்தினாலேயே நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மனு குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை,பெருங்களத்தூர் டவுன் பஞ்சாயத்தின் செயல் அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்

You may also like...