ஜெயலலிதா இறப்பதற்கு முன் மூன்று அமைச்சர்கள் சென்று அவரை நேரில் பார்த்ததாக விசாரணை ஆணையத்தின் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

[3/22, 12:18] Sekarreporter: திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அறவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் – ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் – ஓ.பன்னீர்செல்வம்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்ததாகவும், பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் தன்னிடம் தெரிவிக்கவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது – ஓ.பன்னீர்செல்வம்
[3/22, 12:32] Sekarreporter: ஒ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சாந்த கேள்விகள் கேட்க அப்பல்லோ தரப்பு எதிர்ப்பு

ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்

ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் கேள்வி எழுப்ப முயன்ற போது அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு

சிகிச்சை தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என நேற்றே வாக்குமூலம் அளித்த நிலையில் இன்று அது தொடர்பான கேள்விகளை எழுப்ப கூடாது – அப்பல்லோ வழக்கறிஞர்

ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தான் கேள்வி எழுப்பக் கூடாது. வியாதி இருந்தது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பலாம் – ஆணைய வழக்கறிஞர்

மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும் போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்துக்களை முன்கூட்டியே வழங்க வேண்டும், மேலும் மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் – அப்பல்லோ வழக்கறிஞர்

உங்களின் குறுக்கீடு பதிவு செய்யப்பட்டது – ஆறுமுகசாமி ஆணையம்
[3/22, 13:02] Sekarreporter: *ஜெயலலிதா இறப்பதற்கு முன் மூன்று அமைச்சர்கள் சென்று அவரை நேரில் பார்த்ததாக விசாரணை ஆணையத்தின் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

டிசம்பர் 04 தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனை வந்திருந்தும் ஜெயலலிதாவை சந்திக்காமல் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து தனக்கு நினைவில்லை. பன்னிர்செல்வம் ஆணையத்தில் விளக்கம்.

டிசம்பர் மாதம் 04 ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது தனக்கு தெரியாது, ஆனால் மாலை 05.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இறப்பதற்கு முன்பு நான் உடப்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம்.

You may also like...

Call Now ButtonCALL ME