சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்க(DAA) மாநில செயலாளர் கு.பாரதி அவர்கள் ரிட் மனு எண் 7531/2020 தாக்கல் செய்திருந்தார். 24/4/2020 அன்று விசாரணைக்கு வந்தபோது DAA மாநில துணை தலைவர் ரமேஷ் உமாபதி Video conference ல் ஆஜரானார்.
கொரானா வைரஸ் பரவலை தடுக்க, அறிவித்த 40 நாட்கள் ஊரடங்கு காலத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு ரூபாய் 1000 உட்பட அரிசி தொகுப்புகளை வழங்கியுள்ளது. இதனை வைத்து ஊரடங்கு காலத்தை சந்திப்பது கடினமென்று சொல்லி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 15000 நிவாரணம் வழங்க 13/04/2020 அன்று தமிழக அரசுக்கு மனு அளித்து பதில் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்க(DAA) மாநில செயலாளர் கு.பாரதி அவர்கள் ரிட் மனு எண் 7531/2020 தாக்கல் செய்திருந்தார். 24/4/2020 அன்று விசாரணைக்கு வந்தபோது DAA மாநில துணை தலைவர் ரமேஷ் உமாபதி Video conference ல் ஆஜரானார்.
தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே ரூபாய் 1000 மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் இது நிதிக்கொள்கை என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுசொல்லி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
உழைக்கும் மக்களுக்கான சட்டப்போராட்டம் தொடரும்.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்(DAA)– தமிழ்நாடு.
9710263648