சார் பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணையை நேர்மையாக நடத்த  அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணை நிலை குறித்த அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்…

சார் பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணையை நேர்மையாக நடத்த  அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணை நிலை குறித்த அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்…

சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன், தூத்துக்குடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்யக் கோரி, கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்,
ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்து  அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணை நேர்மயாக நடத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், புலன் விசாரணையின் நிலை குறித்தும், ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...