சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டி

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டி

ஒ.பி.எஸ் க்கு முன்பு ஆணைய சாட்சியாக 148 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருந்தனர் மனுதாரர் சாட்சியாக 7 பேர் விசாரிக்கப்பட்டிருந்தனர்.ஏராளமான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்ன

முதல் கேள்வியாக உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு ஒ.பி.எஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார்

அடுத்த கேள்வி நீதி கோரியவர் நீங்களே, ஆணையம் அமைக்க உத்தரவு போட்டதும் நீங்களே, அதே ஆணையத்தில் கடைசி சாட்சியாக பங்கேற்றுள்ளீர்கள் என்று கேட்ட போது பெருவாரியான மக்களுக்கு சந்தேகம் இருந்ததால் நானும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆணையம் அமைத்ததாக தெரிவித்தார்

ஒராண்டுக்கு முன் 23.1.2021 அன்று தனியார் தொலைக்காட்சியில் ஜெ மரணம் தொடர்பாக
வி கே சசிகலா மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லை, அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை களையும் வண்ணமாக நீதிவிசாரணை வேண்டுமென கேட்டேனே தவிர எந்த காலத்திலும் அவர் மீது சந்தேகம் இல்லை என்று சொன்னதை மேற்கோள் காண்பித்து கேட்ட போது ஆம் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளேன் என தெரிவித்தார்

இரண்டு கட்டமாக இந்த ஆணைய விசாரணை பார்க்கப்பட்டது

22.9.16 க்கு முன்பாக ஜெயலலிதா அவர்களுக்கு போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்ட சிகிச்சை முறை என்ன,என்னென்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், என்ன காரணத்தினால் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்,

22.9 16 முதல் 5.12.16 வரை அவருக்கு என்ன விதமான சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எண்ணற்ற சாட்சிகளிடம் கேள்வி கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

அப்போலோ மருத்துவமனையை சேர்ந்த 12 மருத்துவர்கள் ஏற்கனவே போயஸ் கார்டனில் சிகிச்சை அளித்தவர்கள், ஆனால் அந்த மருத்துவர்கள் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆணையமும் அவர்களிடம் இதைப் பற்றி கேட்கவில்லை, அவர்களும் இதைப் பற்றி சொல்லவில்லை, அவர்களையெல்லாம் திரும்ப அழைத்து என்ன மாதிரியான சிகிச்சை கொடுக்கப்பட்டது, யாரிடம் பேசினீர்கள்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு என்ன குறைபாடு என கூறினாரா
எனக் கேட்டு பதிவு செய்து இருந்தேன். அதை ஓபிஎஸ் யிடம் தெரிவித்து கேட்ட போது…மக்கள் பணியில் இருப்பதால் ஓய்வு எடுக்க முடியாது ன்னு கூறியது குறித்தும், 2016 மே மாதம் 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அப்போதே ஜெ அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியதை எடுத்துரைத்து சந்தேகம் உள்ளதா என்று ஒ.பி.எஸ் யிடம் கேட்டேன்

2014 பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் மன அளவில்
அவர்கள் stress யை நிறைய எடுத்துக்கொண்டது குறித்து மருத்துவர்களிடம் சிகிச்சையின் போது ஜெ தெரிவித்தது சாட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்

ஒ.பி.எஸ் அவர்கள் இன்று
எந்த வித குறைபாடோ,வேறுபாடோ,முரண்பாடோ,
சசிகலா விற்கு எதிராகுற்றச்சாட்டாகவோ எதுவும் பதிவு செய்யவில்லை. அவருடைய சாட்சியம் இன்றுடன் முடிவடைந்தது

ஆணையம் தரப்பின் அனைத்து சாட்சிகளும் முடிவுற்றது

29.12.16 யில் சசிகலா வை நான் தான் பொது செயலாளராக முன் மொழிந்தேன் என்றும் ஒ.பி.எஸ் கூறினார்

ஐ. பி.எஸ் அதிகாரிகள் ஜார்ஜ், தாமரைக்கண்ணன், பொன்மானிக்கவேல், சத்தியமூர்த்தி, ராமானுஜம்,பூஜாரி ஆகியோரை ஆணையம் அழைத்து விசாரித்தபோது 2011 – 2012 காலகட்டத்தில் சசிகலா மற்றும் சசிகலாவை சார்ந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்களா,அது தொடர்பாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா, அது ஜெயலலிதாவிடம் கூறினீர்களா எனக் கேட்டபோது அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை என கூறினர்

ஒ.பி.எஸ் யிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில்,
இது எனக்கு நினைவில் இல்லை, இது சரி, இது உண்மைதான் என கூறினார், சசிகலா மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாக கூறினார்

சசிகலா அவர்கள் 9.3.18 லேயே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டார்,மீண்டும் அவரை ஆணையம் அழைக்காது என்றே நினைக்கிறேன்

You may also like...