கார் விபத்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி திரு. பூர்ண ஜெய ஆனந்த் வயது (55) த/பெ. கார்த்திகேயன்

பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

எட்டையபுரம் வட்டம், முத்துலாபுரம் குறுவட்டம், மேலகரந்தை கிராமம் அருகில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் (TN88K5943) பின்புறம் திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த இன்னோவா கார்,(TN33PH4834) ஆனது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்படி, விபத்தில் காரில் இருந்த ஆறு நபர்களில் மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நபர் செல்லும் வழியில் இறந்து விட்டார். 2 நபர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் காரில் வந்த நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி திரு. பூர்ண ஜெய ஆனந்த் வயது (55) த/பெ. கார்த்திகேயன் மற்றும் அலுவலக பணியாளர்கள் என்பது விசாரணையில் தெரிய வருகிறது. மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் விபரம்
1. வாசுராமநாதன் வயது (34), (RC)
2.தனஞ்ஜெய ராமச்சந்திரன் வயது (58), வழக்கறிஞர்.
3. ஸ்ரீதர் குமார் வயது (37) Court staff
4. நவீன் குமார் (PC)

நீதிபதி திரு. பூர்ண ஜெய ஆனந்த் மற்றும் திரு. உதயசூரியன் ஆகியவர்கள் பலத்த காயத்துடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தினை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்படி நிகழ்வு தொடர்பாக மேல கரந்தை கிராமத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏதுமில்லை என்ற விவரத்தையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

You may also like...

Call Now ButtonCALL ME