எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள ஜீ ஓடிடி தளம் எஞ்சியத் தொகையை நேரடியாக மனுதாரர் நிறுவனத்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது ஜீ ஓடிடி நிறுவனம் சார்பில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார். இதனையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜீ ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

சென்னை, மே 30-

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், நந்தனத்தை சேர்ந்த ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் சீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் நிறுவனத்திடம் திரைப்பட தயாரிப்பு பணிகளுக்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இதில், முதல் தவணையாக குறிப்பிட்ட தொகையை வழங்கிய இந்நிறுவனம், இரண்டாம் தவணையை வழங்கவில்லை.
இந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த’ நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து ஜீ ஓடிடி தளத்தில் திரையிட திட்டமிட்டுள்ளது. எனவே, எங்களுக்கு தரவேண்டிய தொகையை தராமல் இப்படத்தை படத்தை திரையிடவோ, விநியோகம் செய்யவோ தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள ஜீ ஓடிடி தளம் எஞ்சியத் தொகையை நேரடியாக மனுதாரர் நிறுவனத்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது ஜீ ஓடிடி நிறுவனம் சார்பில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார். இதனையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜீ ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

You may also like...