உயர்நீதிமன்ற நீதிபதி J. சத்ய நாராயண பிரசாத் அவர்களின் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

[07/05, 16:36] sekarreporter1: செய்தி வெளியீடு எண்: 969

: 07.05.2025

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி J. சத்ய நாராயண பிரசாத் அவர்களின் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி J. சத்ய நாராயண அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு பிரசாத் பேரதிர்ச்சிக்குள்ளானேன்.

அவரை இழந்து உறவினர்களுக்கும் கொள்கிறேன். வாடும் அவரது குடும்பத்தினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்

மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய தனது தந்தையின் வழியில் சட்டத்துறையை தேர்வு செய்து, வழக்கறிஞராகி, அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பான வழக்குகளிலும் திறம்பட வாதிடும் திறமை படைத்தவர்.

வழக்கறிஞராக நீண்ட அனுபவத்துடன் 2021-இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். நீதித்துறையில் மேலும் தனது சிறந்த பங்களிப்பை, சாதனைகளைப் படைக்க வேண்டிய தருணத்தில் நிகழ்ந்து விட்ட அவரது எதிர்பாராத மறைவு நீதித்துறைக்கும் நீதி பரிபாலன முறைக்கும் பேரிழப்பாகும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாருக்குக் காவல்துறை அணிவகுப்புடன் கூடிய இறுதி மரியாதை செலுத்தப்படும். பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரை இழந்து வருந்தும் சக நீதியரசர்கள், வழக்கறிஞர்கள். நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:

tndiprnews

tndiprtndipr

TN DIPR

www.dipr.tn.gov.in

TNDIPR, Govt. of Tamil Nadu
[07/05, 16:36] sekarreporter1: [07/05, 08:56] sekarreporter1: [07/05, 08:55] v. Elango Adv கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து தினமும் நீதிபதி திரு சத்ய நாராயண பிரசாத் அவர்கள் முன்பு பல வழக்குகளில் நான் ஆஜராகி வாதாடி உள்ளேன். அவருடைய அணுகுமுறையேஇந்த வழக்கில் எப்படி பரிகாரம் வழங்கலாம் என்பதுதான். இவரது நீதிமன்றத்தில் மதியம் 12 மணிக்கு கூட அவசர நிலையை கூறி mention பண்ணி slip வாங்க முடியும். அவசரகால வழக்குகளுக்கு இவர் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கையை ஏற்று விசாரணை மேற்கொள்வார். கடந்த 30.04.2025 அன்று கூட நான் வரலாற்று சிறப்புமிக்க, மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி தாக்கல் செய்த பெரியார் நெடுஞ்சாலை பெயர் சம்பந்தமாக ஒரு தீர்ப்பை இவர் எனக்கு அளித்தார். என்றென்றும் மக்கள் நீதிபதி ஆவார். வழக்கினை பொறுமையாக கனிவாக விசாரிப்பார். ஜூனியர், சீனியர் என்ற வேறுபாடு பார்க்க மாட்டார். அவருடைய தீர்ப்புகள் கூட மிகவும் எளிமையாகவும் standard ஆகவும் இருக்கும். அவருடைய மறைவு இந்த வழக்கறிஞர் சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பு. இவர் சாதாரண மக்களுக்கான ஒரு மாபெரும் நீதிபதி. இவரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. வழக்கறிஞர் வி. இளங்கோவன்.
[07/05, 08:55] sekarreporter1: 🙏
[07/05, 16:34] sekarreporter1: [07/05, 09:48] sekarreporter1: [07/05, 09:46] ML Ravi Advt Mhc: ஒரு சிறப்பான நீதிபதியை இழந்தது சென்னை உயர்நிதிமன்றம், ஆழ்ந்த இரங்கல்
[07/05, 09:48] sekarreporter1: 🙏
[07/05, 16:34] sekarreporter1: [07/05, 11:04] sekarreporter1: [07/05, 11:03] SriniVasa Rao: விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் —சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சத்திய நாராயண பிரசாத் அவர்களுக்கு –செம்மார்ந்த வீரவணக்கம்
[07/05, 11:04] sekarreporter1: 🙏
[07/05, 16:33] sekarreporter1: [07/05, 08:25] sekarreporter1: [07/05, 08:24] Thirumoorthy Barath Flat: ஏழைகளுக்கு ஒரு சட்டம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு சட்டமா என கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்ற அறை எண்-36 ல் அரசு வழக்கறிஞர் களையும், அதிகாரிகளையும் பார்த்து கேள்வி கேட்டு கொண்டே இருந்தார். நீதிபதி சத்யநாராயண பிரசாத் அவர்கள் கேட்ட கேள்வி எதிரொலி த்து கொண்டே இருக்கிறது. அவர் இறப்பு கவலையும், வலியும் கொடுக்கிறது.

வழக்கறிஞர்-
திருமூர்த்தி
[07/05, 08:25] sekarreporter1: 🙏
[07/05, 08:31] sekarreporter1: [07/05, 08:30] S Sankar Advt: வெகு இயல்பாக மக்களோடு மக்களாக பழகி வந்த நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
[07/05, 08:30] sekarreporter1: 🙏
[07/05, 08:44] sekarreporter1: [07/05, 08:42] Ilayaraja: சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் ஐயா சத்யநாராயண பிரசாத் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இளையராஜா கந்தசாமி வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம்
[07/05, 08:42] sekarreporter1: 🙏
[07/05, 16:32] sekarreporter1: [07/05, 11:37] Add Pp Prabavathy: மக்கள் நீதிபதி
ஓவ்வொரு நாளிலும் ஒரு நிமிடத்தைகூட வீணாக்காமல் தன்னால் முடிந்த அளவு தீர்வுகள் தந்தவர்
சாமானியர்கள் குரலின் எதிரொளியானவர் நீதிமன்றகதவுகளை
நீதியின் வெளிச்சமாகவே திறந்து வைத்தவர்
கொடுத்த தீர்ப்பு நிறைவேறுவதை
உறுதி படுத்தியவர்
சொல்லாக மட்டும் அல்லாமல்
செயலாலும் கண்காணித்தவர்
நீதிப்பரிபாலனம் செய்வதற்கு
கடிகாரமுள்ளைவிட சில மணித்துளிகள் முன்னால்
நின்றவர்
“My lord”என்ற வார்த்தைக்கு
உதாரணபுருஷர்
என் 25 ஆண்டுகால சட்டத்தொழிலில் நான் பார்த்த
மிக இயல்பானவர்
பதவிதான் அவரைச்சுமந்தது
அவர் பதவியை சுமக்கவில்லை
நல்லவர்க்கு அழகு சொல்லாமல் செல்வது என்பது இதுதானோ
இறைவா நல்லவர்களை எல்லாம் இவ்வளவு சீக்கிரம்
எடுத்துக்கொள்கிறாயே
நீயும் கலியுக கர்மாவில் இணைந்துவிட்டாயோ
நீதிதேவதை தன்
அற்புத தவப்புதல்வனை இழந்து தவிக்கிறாள்
ஈடுசெய்ய முடியாத இழப்பு
எல்லாம் அவன் செயல்
கிருஷ்ணார்ப்பணம்
[07/05, 15:04] sekarreporter1: 🙏

You may also like...

Call Now ButtonCALL ME