மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இலவச சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை என்றும்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தின் வாயிலாக சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டு மே 20 தேதி முடிவடையும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் முன் பருவ சேர்க்கையான எல்.கே.ஜி,யூ.கே.ஜி விண்ணப்பம் அளிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும்,
கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர் ஆனால் இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த திட்டம் முடங்கும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே மாணவர்
சேர்க்கையை இந்த ஆண்டு உடனடியாக தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் மனதாரர் சொல்லித் தர வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்தனர்.