தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்‌ஷேனா தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்‌ஷேனா தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

அதில், ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சித்தாலபாக்கம் ஏரியை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டதாகவும், அந்த கூட்டத்தில், நீர் நிலைகளின் எல்லைகள் குறித்து சென்னை முழுவதும், ஜிபிஎஸ்(GPS) கருவி மூலம் வரைபடம் தயாரிக்கபட்டு, உள்ளூர் அளவில், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, நல சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என குழு அமைத்து மாதம்தோறும் கண்காணித்து அறிக்கை அளிக்கும் வகையில் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தி முன்னோடி திட்டமாக சிட்லபாக்கம் ஏரியில் முதல் கட்டமாக அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளை மீட்டு அதை பாதுகாப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீர் நிலை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களுக்கு மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என கடந்த மாதம் தலைமை செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கபட்டது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தரப்பட மாட்டது என்றும், சம்பந்தப்பட்ட நிலத்தை பதிவு செய்வதற்கு முன்னாள் பதிவு துறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடுவெடுக்கபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நீர் நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டபடக்கூடாது என்றும், முக்கியமான நீர் நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லை கற்கள் நடப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9802. ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 210 நீர் நிலைகள் சீரமைக்கபட்டு புரணமைக்கபடும் என்றும், இதில் 147 நீர் நிலைகள் ஏற்கனவே சுமார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தபடுவதாகவும், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டபட்டுள்ள இடங்களில் வீட்டு வரி விதிக்கபட மாட்டாது, அங்கீகாரம் வழங்கபடமாட்டாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாக பதில் மனுவில் தெரிவிக்கபட்டது.

You may also like...