ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறியதாக கூறி ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
சென்னை உயர்நீதிமன்றம்
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து காவல்துறை அதிகாரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு
தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – காவல்துறை தரப்பு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன்
காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் மீதமுள்ள ஐந்து பேருக்கு எதிரான உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் – காவல்துறை தரப்பு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன்
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் ,வி. லட்சுமி நாராயணன் அமர்வு