New govt aag reply / MadrasHighCourt Chief Justice’s Bench has decided to examine on August 3, 2026 a construction ban imposed by National Greeen Tribunal on 1-kilometre radius around the
#MadrasHighCourt Chief Justice’s Bench has decided to examine on August 3, 2026 a construction ban imposed by National Greeen Tribunal on 1-kilometre radius around the boundaries of Pallikaranai marshland in Chennai. The court agreed for early hearing of the case after senior counsel P.S. Raman, representing CREDAI Chennai, said, owners of 8,584.44 acres of land spread over Puzhuthivakkam, Madipakkam, S. Kolathur, Pallikaranai, Jalladianpet, Perumbakkam, Arasankalani, Semmancheri, Sholinganallur, Karapakkam, Injambakkam, Okkiyam Thoraipakkam, Seevaram, Perungudi, and Velachery have been affected because of the ban @THChennai
thehindu.com/news/national/…
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமானத்துக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து கிரடாய் அமைப்பு தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமானத்துக்கும் அனுமதி வழங்கக் கூடாது என கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் பள்ளிக்காரணையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க தடை விதித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
பசுமை தீர்ப்பாயம் மற்றும் சிஎம்டிஏ பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரடாய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கிரடாய் தரப்பில் பள்ளிக்காரணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மெட்ரோ ரயில், 36 கல்லூரிகள், 11 மருத்துவமனைகள், ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன; எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல், ஒரு தனியார் அறக்கட்டளை அளித்த வரைவு அறிக்கையின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது; இந்த உத்தரவு காரணமாக அப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி, கட்டுமானத்துக்கு தடை விதிக்கும் பரப்பை மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் aag Bala subramaniyam பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு காரணமாக கட்டிட அனுமதி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனவும், 47 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.