அரசு தரப்பில் ப்ளீடர் முத்துக்குமார் ஆஜராகி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மன நலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டுவருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மையம் அமைக்கக்கோரி சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர்...