வழக்கறிஞர்கள் சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அறிவுறுத்தினார்.

[07/06, 07:43] sekarreporter1: [07/06, 07:42] sekarreporter1:

 

 

 

 

[07/06, 07:42] sekarreporter1: 👍
[07/06, 07:52] sekarreporter1: வழக்கறிஞர்கள் சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அறிவுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், ஜூன் 8-ம் தேதி பணி ஓய்வு பெற இருக்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வழியனுப்பு உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், சீனாவில் ஆண்டுகளுக்கு பெயர் சூட்டுவதுண்டு. இங்கு 1963 ஆம் ஆண்டுக்கு நீதிபதிகள் ஆண்டு என்று பெயர் சூட்ட வேண்டும். 1963 ஆம் ஆண்டில் பிறந்த 12 நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறார்கள். கடந்த ஜனவரி முதல் இதுவரை 7 நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர். இதன் மூலம் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை இழந்திருக்கிறோம். அதனால் புதிய நீதிபதிகளை நியமிக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

மேலும் நீதிபதி டீக்காராமன், தன்னுடைய பதவி காலத்தில் 45 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி டீக்காராமன், 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் கிருஷ்ணகிரியில் நீதிபதியாக பதவியேற்றதாக்கவும், அதே நாளில் ஓய்வு பெறுவதை சுட்டிக்காட்டி, திருப்தியுடன் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டார்.

மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஒரு பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த போது 500 பேர் வேல் கம்புடன் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டதாகவும் 14 காவல்துறையினர் தனக்கு பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்ட நீதிபதி டீக்காராமன், ஒரு கட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதை அடுத்து இந்த வழக்கு ரத்தானது என்று கூறி இந்த வழக்கு தான் சந்தித்த விசித்திரமான வழக்கு என்று குறிப்பிட்டார்.

அகில இந்திய அளவில் உயர் நீதிமன்றங்களில் நிரந்தர நீதிபதிகளாக உள்ள 865 நீதிபதிகளில் 108 ஆவது இடத்தில் பதவி வகித்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்ட நீதிபதி டீக்காராமன், வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலுக்கும், சமுதாயத்திற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நீதிபதி டிக்காராமன் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது.

You may also like...

CALL ME
Exit mobile version