மீரா ஆறுமுகம் வழக்கறிஞர் அன்பார்ந்த அனைவருக்கும் என் காலை வணக்கங்கள். அறிவோமா ஆன்மீகத்தில் இன்று..

மீரா ஆறுமுகம்
வழக்கறிஞர்
அன்பார்ந்த அனைவருக்கும் என் காலை வணக்கங்கள்.
அறிவோமா ஆன்மீகத்தில் இன்று..
*தினமும் இவர் பெயரை உச்சரித்தாலே போதும். துன்பம் நம்மை நெருங்கவே பயப்படும். நோய்நொடிகள் ஏவல் பில்லி சூனியம் நம்மை கண்டு பயந்து ஓடி விடும்.*

வாழ்க்கையில் நமக்கு நடக்கக்கூடிய நல்லது கெட்டதை நிர்ணயிப்பது அந்த கடவுள் தான். இன்பமோ துன்பமோ, நல்லதோ கெட்டதோ தினமும் ஏதாவது ஒரு இறைவனின் நாமத்தைச் சொல்லி அந்த இறைவனை வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்துக் கொண்டாலே போதும். நம் வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் நம்மை கண்டு பயந்து ஓடிவிடும். அந்த வரிசையில் இன்று நாம் சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த சக்கரத்தாழ்வார் யார் என்பது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். பெருமாளின் கையில் ஆயுதமாக இருப்பது சங்கும் சக்கரமும். பெருமால் கையில் இருக்கும் சக்கரத்தில் இருக்கக்கூடிய, இறைவனை தான் சக்கரத்தாழ்வார் என்று சொல்வார்கள்.

இந்த உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, உலக மக்களுக்கு எந்த ஒரு கெட்ட சக்தியாலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பெருமாளால் நியமிக்கப்பட்டவர் தான் இந்த சக்கரத்தாழ்வார். சக்கரத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளைத் தான் சக்கரத்தாழ்வாராக நம் வழிபாடு செய்கின்றன. தினமும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வந்தோமேயானால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும்.

ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல் நம்மை நெருங்காமல் இருக்கும். நோய் நொடிகள் நம்மை அண்டாது. நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம். வாழ்க்கையில் நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகள் நம்மிடம் நெருங்காமல் இருக்கும். காரியத் தடை விலகும்.

பெரும்பாலும் எல்லா பெருமாள் கோவில்களிலும் தனியாக சக்கரத்தாழ்வாருக்கு என்று ஒரு சந்நிதி அமைந்திருக்கும். அந்த சன்னிதிக்கு சென்று சக்கரத்தாழ்வாரை முதலில் முன் பக்கம் தரிசனம் செய்துவிட்டு, சக்கரத்தாழ்வாரை வலம் வரும்போது பின்னால் ஒரு துவாரம் இருக்கும். அந்த துவாரத்தின் மூலம் பார்த்தால் நமக்கு சிறிய அளவில் நரசிம்மரின் உருவம் தெரியும். நரசிம்மரையும் பின்பக்கத்தில் தரிசனம் செய்ய வேண்டும். பெருமாள் கோவிலுக்கு சென்றால் சக்கரத்தாழ்வாரை இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும்.

தினமும் எல்லோராலும் கோவிலுக்கு சென்று சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்ய முடியாதபட்சத்தில் தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் படத்திற்கு முன்பாக நின்று சக்கரத்தாழ்வாரை மனதார நினைத்து ‘ஓம் சுதர்ஸனாய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து விட்டு உங்களுடைய வேலையை தொடங்குங்கள். ‘சக்கரத்தாழ்வாரே இன்று நான் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் எனக்கு வெற்றியை கொடுக்கவேண்டும். தடைகள் தகர்க்கப்பட வேண்டும். எனக்கு எது நல்லதோ அதை நீயே முன்னின்று செய்வாயாக.’ என்றபடி வேண்டுதலை வையுங்கள். உங்கள் பின்னால் வெற்றி மட்டுமே வரும்.

சக்கரத்தாழ்வாரின் மற்றொரு பெயர்தான் சுதர்சனர். தினமும் இவர் நாமத்தை உச்சரித்தாலே போதும். உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனையை, உங்களுக்கு முன்னால் நின்று தீர்த்து வைக்க நம்மை காக்கும் கடவுளான அந்த சக்கரத்தாழ்வாரே வருவார் என்பதில் எந்த ஒரு துளியளவும் சந்தேகமும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றிக் பலனடையலாம். #🔯

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version