மருத்துவ கல்லூரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் செல்லும் — தேசிய மருத்துவ ஆணையம்

மருத்துவ கல்லூரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் செல்லும் — தேசிய மருத்துவ ஆணையம்

கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக நடத்தும் வகுப்புகள் அனுமதிக்கப்பட்டதுதான் என்றும், செல்லுபடியாகக்கூடியது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்

அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும் ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் விளக்கம்

தியரி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம். கொரோனா பேரிடர் முடிந்த பின்னர் கல்லூரிகள் திறக்கப்படும்போது செய்முறை (பிராக்டிகல்) மற்றும் கிளினிகல் பயிற்சி வகுப்புகளை சமன் செய்து கொள்ளலாம் – தேசிய மருத்துவ ஆணையம்

மருத்துவக் கல்வியில் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கவில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியது தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் அயல்நாட்டு மருத்துவ பல்கலைகழகங்கள் நடத்தும் வகுப்புகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று அளித்த விளக்கம் ஆகும் – ஆணையம் விளக்கம்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version