தினமலர் திருச்சி-வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கோயிலில் சேவையாற்றும் அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள் போன்றவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், பிற ஊழியர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என, அறநிலையத்துறை ஆணையருக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் மே 19ல் இ-மெயில் மூலம் முறையீடு செய்தேன். அதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அரசு தரப்பின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, வாழ்வாதாரத்துக்கு திருக்கோயில் சேவைகளைச் சார்ந்திருக்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், திருவிளக்கு ஏந்தி செல்வோர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய நிதியுதவியை எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version