SHANMUGA SUNDARAM R: இந்த வழக்கின் விபரங்களை அறிந்து கொள்ளும் முன், சட்டம் மற்றும் தீர்ப்புகளை தமிழில் அறிந்து கொள்ள கீழே கண்ட டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள். மான்சிங் என்பவர் காலத்சிங் என்பவரின் மாற்றுச் சான்றிதழை மோசடியாக பயன்படுத்தி, அந்த மாற்றுச் சான்றிதழில் மான்சிங்கின் பெயரையும், பிறந்த தேதியையும் போலியாக குறிப்பிட்டு,

SHANMUGA SUNDARAM R:
இந்த வழக்கின் விபரங்களை அறிந்து கொள்ளும் முன், சட்டம் மற்றும் தீர்ப்புகளை தமிழில் அறிந்து கொள்ள கீழே கண்ட டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள்.

 

மான்சிங் என்பவர் காலத்சிங் என்பவரின் மாற்றுச் சான்றிதழை மோசடியாக பயன்படுத்தி, அந்த மாற்றுச் சான்றிதழில் மான்சிங்கின் பெயரையும், பிறந்த தேதியையும் போலியாக குறிப்பிட்டு, கால்நடைத்துறையில் உதவியாளர் பணியை பெற்றதாக கூறி அவர்மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 419, 468, 471 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், மான்சிங் குற்றவாளி என்று கூறி அவருக்கு தண்டனை விதித்தது. ஆனால் மான்சிங் தனக்கு தண்டனை அளிப்பதற்கு பதிலாக, குற்றவாளிகள் கண்காணிப்பு சட்டத்தின் கீழான பலனை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினர். அந்த கோரிக்கையை நிராகரித்த கீழமை நீதிமன்றம், போலி சான்றிதழ் மூலம் அரசுப்பணியை பெற்று மோசடி செய்துள்ளதால், குற்றவாளிகள் கண்காணிப்பு சட்டத்தின் பலனை பெறுவதற்கு தகுதியில்லை என்று கூறி அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பை எதிர்த்து மான்சிங் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த மாவட்ட நீதிபதி, கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார்.

அதனை எதிர்த்து மான்சிங் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தபோதிலும், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையில் மாறுதல் செய்து, ஏற்கனவே மான்சிங் சிறையில் இருந்த காலத்தை தண்டனையாக வழங்கியதோடு, அபராதத் தொகையை ரூ 10,000/- ஆக உயர்த்தி உத்தரவிட்டது.

அதன்படி மான்சிங் ரூ. 10,000/- த்தை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ததற்கு பிறகு, மான்சிங் தான் அரசுப்பணியில் இருப்பதால் குற்றவாளிகள் கண்காணிப்பு சட்டத்தின் பலனை தனக்கு அளிக்க வேண்டும் என்று கோரினர். அதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் கண்காணிப்பு சட்டத்தின் பலனை மான்சிங்குக்கு அளித்ததோடு மட்டுமின்றி மான்சிங் சிறையில் இருந்தது அவரது அரசுப்பணியை எவ்விதத்திலும் பாதிக்காது என்று உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்..

உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முறையற்றது. ஏற்கனவே தண்டனையை குறைத்து அபராதத்தை உயர்த்தி கு. வி. மு. ச பிரிவு 482 ன் கீழ் உத்தரவை பிறப்பித்த பிறகு அதனை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்டு கூடுதலாக உத்தரவு பிறப்பிக்க 482 அதிகாரம் ஏதும் வழங்கவில்லை.

உச்சநீதிமன்றம், கேரளா அரசு Vs M. M. மணிகண்டன் நாயர் என்ற வழக்கில், உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மறுஆய்வு செய்வதற்கான அதிகாரம் கு. வி. மு. ச பிரிவு 362 அல்லது 482 ன்படி உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இதே கருத்தை உச்சநீதிமன்றம், மாநில அரசு SBCID Vs K. V. இராஜேந்திரன் மற்றும் பலர் என்ற வழக்கிலும் தீர்ப்பாக கூறியுள்ளது.

கு. வி. மு. ச பிரிவு 362 ன்படி தீர்ப்பில் ஏற்பட்டுள்ள தட்டச்சுப் பிழை, எழுத்துப் பிழை ஆகியவற்றை திருத்த மட்டுமே உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது மற்றபடி மறு ஆய்வு செய்ய அதிகாரம் ஏதுமில்லை என்று உச்ச நீதிமன்றம், ஹரிசிங் மான் Vs ஹர்பஜன்சிங் பஜ்சுவா மற்றும் பலர் மற்றும் சூரஜ்தேவி Vs பியாரேலால் மற்றும் ஒருவர் ஆகிய வழக்குகளில் தீர்ப்புகள் கூறியுள்ளது.

மூன்று நீதிமன்றங்களும் தண்டனையை உறுதி செய்துள்ளது. ஆனால் குற்றவாளிகள் கண்காணிப்பு சட்டத்தின் பலனை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது தவறானது.

ஒரு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு எதிரிக்கு குற்றவாளிகள் கண்காணிப்பு சட்டத்தின் பலனை நீதிமன்றம் அளிக்க விரும்பினால், அந்த எதிரியின் நடத்தை குறித்து நன்னடத்தை அதிகாரியிடமிருந்து பிரிவு 4 ன் கீழ் அறிக்கை பெற வேண்டும். ஆனால் அவ்வாறு ஒரு அறிக்கை இந்த வழக்கில் பெறப்படவில்லை.

அறிக்கையை பெற்றதற்கு பின்னர், எதிரியிடமிருந்து பிணைய ஆவணத்தை எழுதி பெற வேண்டும். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு நன்னடத்தையுடன் இருப்பதாக கூறி எதிரியிடமிருந்து எழுதி வாங்க வேண்டும். அந்த கால கட்டத்தில் எதிரி நன்னடத்தையுடன் இருக்க வேண்டும். அதேபோல பிரிவு 4(1) ல் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ள எதிரி அவருக்கு பதிலாக பிணையதாரர்களாக இருப்பவர்கள் நிலையான இடத்தில் வசித்து வருவதோடு, அவர்களுக்கு நிரந்தர தொழிலும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆக குற்றவாளிகள் கண்காணிப்பு சட்டத்தின் பலனை எதிரி பெற வேண்டும் என்றால் நன்னடத்தை அலுவலரிடமிருந்து அறிக்கை பெற வேண்டும், ஜாமீன் கொடுக்க வேண்டும். ஜாமீன் கொடுப்பவர்களுக்கு சரியான முறையில் தகுதி இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், AIR – 2005 – SC – 2658 என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

நீதிமன்றங்கள் குற்றவாளிகள் கண்காணிப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை விடுதலை செய்தாலும், அவருக்கு அரசுப்பணி வழங்குவது குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம், State Bank of India and Others Vs P. Subramaniyan என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மான்சிங்கின் அரசுவேலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உத்தரவிட்டது சட்டத்திற்கு எதிரானது என்று கூறி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

DEPARTMENT NEWS

*அரசு ஊழியர் யார்?*

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும்.

”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees)

அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது..

1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)

2. தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)

3. தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது. (முன்பு C & D Class).

*அரசு ஊழியர் பெறும் சம்பளம்*

அடிப்படை சம்பளம்( Basic salary), பஞ்சப்படி எனும் அகவிலைப்படி(Dearness Allowances), பயணப்படி (Travelling Allowances), வீட்டுவாடகை படி (House allowance), அரசு ஊழியர் ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் (Govt. Employees Health Fund Scheme), வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு (provident fund) பொங்கல் பரிசு (Pongal Gift), விழா முன்பணம்(Festival Advance), மருத்துவ படி (Medical Allowance) விடுப்பு பணம்(Encashment of Leave) ஓய்வூதியம், இன்னும் பல

*அரசு ஊழியர்களுக்கான செலவு*

மாநில அரசின் மொத்த வருவாயில் மாநில வரிவருவாய் ரூ. 99,590.13 கோடி வரி அல்லாத ஏனைய வருவாய் 12,318. கோடியில் ரூ.66,908 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும் செலவிடப்படுகிறது.

*அரசின் முக்கிய துறைகள்*

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை

எரிசக்தி, சுற்றுச்சூழல் (ம) வனத்துறை, நிதி துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை, உயர்கல்வி துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை, திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொது துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பொது (தேர்தல்கள்) துறை,பொதுப்பணி துறை. இத்தனை துறைகளில் ஊழியர்கள் உண்டு.

*தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 சொல்வது என்ன?*

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.

*விதி-3*

எந்த அரசு ஊழியரும் வரதட்சணை கொடுக்கவோ, பெறவோ கூடாது.

*விதி-3-A*

எந்த அரசு ஊழியரும் தனியார்களின் கௌரவ விழா, ஓய்வி விழா, நிறுவனங்கள், பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை அரசின் முன் அனுமதியின்றி செய்தல் கூடாது.

*விதி-5*

எந்த அரசு ஊழியரும் பங்குச் சந்தையில் ஈடுபடுதல், வேறு முதலீடுகள் செய்தல், தன் சார்பாக குடும்ப உறுப்பினர்களை ஈடுபடச் செய்தல், எந்த தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

*விதி-6 (4) (aa)*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி யாருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் அசையும் சொத்தை குத்தகை, அடமானம், வாங்குதல், விற்றல், கொடை செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை அரசின் அனுமதியின்றி செய்தல் கூடாது.

*விதி-7*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி எந்த வியாபாரம், தொழிலில் ஈடுபடக்கூடாது.

*விதி-11*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி பிரசுரம் போன்றவற்றை ஈடுபடுதல் கட்டுரை வரைதல் செய்தல் கூடாது.

*விதி-12*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி பொதுவிழாவில் நடந்த விசயங்களை, கருத்தை சொல்லக் கூடாது. அரச்சின் கொள்கைகள், அரசு பரிபாலனம், அரசின் மற்ற அரசுகளுடனான உறவுகள் பற்றி பேசுதல் கூடாது. அலுவலகம் சாராத கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், தலைமை ஏற்றல் கூடாது.

*விதி-14*

எந்த அரசு ஊழியரும் தன் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈருபடுதலை தடுக்க வேண்டும்.

*விதி-14-A*

எந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப்பட்டோ இருத்தல் கூடாது

*விதி-17*

எந்த அரசு ஊழியரும் நெருங்கிய சொந்தங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியவோ, தன் பணி சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியமர்ந்திருப்பதையோ அனுமதிக்கக் கூடாது.

*விதி-20*

எந்த அரசு ஊழியரும் முழுமனதுடன், முழு ஈடுபாட்டுடன் பணியில் இருக்க வேண்டும்.

*விதி-20-B*

எந்த அரசு ஊழியரும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தல், பாலியல் ஆசையை முன்மொழிதல், தொடுதல், கேட்டல், வேண்டல், சைகை, ஆபாசப்படம் காட்டுதல் போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.

*பிரிவு-21*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி அலுவலக நேரத்தில் அல்லது அலுவலின் போது குடித்திருக்கக் கூடாது.

*இதையெல்லாம் ஊழியர்கள் கடைபிடிக்கிறார்களா?*

*அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா! சட்டம் சொல்வதென்ன?*

# அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து.19.(1)(c) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை அளிக்கிறது.

# ஆனால் ஷரத்து 19(4) இன் படி ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் மீது அக்கரை கொண்டு, சொல்லப்பட்ட உரிமையில் நியாயமான கட்டுப்பாட்டை விதிக்கக் கூடிய நடைமுறையிலுள்ள சட்டம் எதையுமோ அரசு இயற்றிய உட்கூறுகள் பாதிக்கக் கூடாது.

# இதை P.N.Ramasamy Vs The Commissioner of Coimbatore AIR 1968 (Masdras) 383 Per Ramakrishna J.- என்ற வழக்கில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

# O.K.Ghosh Vs.E.X.Joseph, AIR 1963 SC 812 என்ற வழக்கில் சங்கங்கள் அமைப்புகளுக்கு உரிமை கொடுக்கப்பட்ட உரிமை ஒரு உத்திரவாதமான உரிமை என கொள்ள முடியாது, தகுந்த காரணங்கள்: இருப்பின் அவை திரும்பப் பெறப்படும் என் தீர்ப்பளித்துள்ளது.

# தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 விதி-16 இன் படி எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி சங்கத்தில் அமைப்பில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விதி-22-A இன் படி அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்தில் ஊர்வலம் கூட்டங்கள் நடத்தகூடாதென சொல்லப்பட்டுள்ளது.

மேலும் All India Bank Employees’s Association Vs. National Industrial Tribunal என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், “ வேலைநிறுத்தம் என்பது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து-19-இன் படி அடிப்படை உரிமையில்லை, ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தலாம் எனவும், தங்கள் குறைகளை வேலைநிறுத்தல் என்ற உரிமையை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்தது.

*இறுதியாக!*

எப்படியாவது அரசு வேலைக்கு செல்வது என பெரு முயற்சி எடுத்து சேர்ந்து, அரசின் அத்தனை பணப்பலன்களையும் பெற்று பணிக்கு வந்தது மக்கள் பணி ஆற்றவே. 2002ல் தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) போன்ற சட்டத்தை இயற்ற அரசை தள்ளியது யார் என எண்ண வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீத அரசு ஊழியர்களுக்கு அரசு செலவிடும் தொகை 60 சதவீதத்துக்கும் மேல்.என்பதை நினைவுக்கூர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்

மேலும், ஊழியர்கள், அலுவலர்கள் வரும் நேரம், செல்லும் நெரம், அலுவலர்கள் கள ஆய்வு செல்லும் இடம் நேரம்,என அனைத்து பணிகளைச் குறிப்பிடும் மாவட்ட அலுவல கையேடு(District Office Manual), அரசு ஊழியர் நடத்தை விதிகள்(the tamil nadu government servants’ conduct rules, 1973), தமிழ்நாடு அரசு சார்நிலை ஊழியர்கள் பணி விதிகள்(tamilnadu government subordinate service rules) என ஒவ்வொரு துறைக்கும் உள்ள பணிவிதிகளை அனைவரும் தெரிந்து அதன்படி நடந்தால் அரசு இயந்திரம் சிறக்கும்

*நடத்தை விதிகள்*

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்

*நடத்தை விதிகள் என்றால் என்ன*?

அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) & (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.தந்தை / வளர்ப்பு தந்தைதாய் / வளர்ப்பு தாய்கணவன்மனைவிமகன் / வளர்ப்பு மகன்மகள் / வளர்ப்பு மகள்சகோதரன்சகோதரிமனைவியின் தாய் மற்றும் தந்தைகணவரின் தாய் மற்றும் தந்தைசகோதரனின் மனைவிசகோதரியின் கணவர்மகளின் கணவர்மகனின் மனைவிஇந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.உயர்கல்வி பெறுவது தொடர்பான அரச…

1)GO.MS.200 P&AR dt 19.4.96

உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.

2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின் விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR
அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி பெற்றதாக கருதப்படும்.

இரா.கணேசன்,
அருப்புக்கோட்டை
9443920595ழ

You may also like...