Jp-மாண்புமிகு நீதியரசர் கே.என் . பாஷா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நீதியரசர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். by Sekar Reporter · May 14, 2020 💐💐💐💐💐மாண்புமிகு நீதியரசர்கே.என் . பாஷா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுநீதியரசர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.கடந்த 2004 -2005 காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்பணியிடம் நிரப்பப்படாமல்இருந்த நிலையில் பணியாற்றிக் கொண்டிருந்தமொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உடனடியாக காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக் கோரி காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்தது. அப்போராட்டத்தின் பலனாக நீதித்துறை வரலாற்றில் முதல் முதலாக ஒரே நாளில் 17 நீதிபதிகள் பொறுப்பேற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்தது.அவ்வாறு பதவியேற்ற நீதிபதிகளில்அனைவரும் பல்வேறு சட்ட பிரிவில் சிறந்தவர்களாக விளங்கி நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான வழக்குகளை விரைவில் முடித்து சென்னை உயர்நீதிமன்றம் மற்ற உயர் நீதி மன்றங்களை விட மிக அதிகமாக வழக்குகளை பைசல் செய்து சாதனையை படைத்தது.வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில்17 நீதிபதிகளில் ஒருவராக தன் பணியைத் தொடங்கிய மாண்புமிகு நீதியரசர் கே. என். பாஷா அவர்கள் பணியாற்றிய 2005லிருந்து 2013 வரையான காலகட்டம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் பொற்காலம் என்றால் மிகையாகாது. மாண்புமிகு நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களை ” மக்களின் நீதிபதி ” என்று அழைப்பார்கள் ஆனால் நம் நீதியரசர் அவர்களை ” வழக்கறிஞர்களின் நீதிபதி ” என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும்.அந்த அளவிற்கு வழக்கறிஞர்களின் நலனில் மிகுந்த அக்கறையும் அரவணைப்பையும் கொண்டு மனித நேயத்தின் மறு உருவமாகவே திகழ்ந்தார்.2003 ஆண்டில்முதல் தலைமுறை வழக்கறிஞராகப் பதிவு செய்த என்னைப் போன்ற இளம் வழக்கறிஞர்கள் இத்தொழிலில் நிலைத்து நிற்கும் நம்பிக்கையை மனதில் விதைத்து எங்கள் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்தவர்.எவ்வளவு கடினமான வழக்காக இருந்தாலும் அவரிடம் வழக்கை எடுத்துக் கூறினால் சீனியர் ஜூனியர் என்ற பேதம் பார்க்காமல் உத்தரவு பெற்றுவிடலாம்என்ற உத்வேகத்தை ஏற்படுத்திக்கொடுத்த உத்தமர்.2007 இல் நடைபெற்ற எனது திருமணத்திற்கு வருகை தந்து வாஞ்சையோடு வாழ்த்திய நற்பண்பின் பிறப்பிடம் அவர்.அந்தக் கரகர குரலுக்கு சொந்தக்காரர்கடும் சொல் பேசாதவர். இன்முகத்துடன்அந்தக் கர்ஜனை சிரிப்பால் நம்மை கவரக்கூடிய கண்ணியமானவர். நாம் தவறு செய்தால் அதை தாயுள்ளத்தோடு மன்னிக்கும் தகைமையாளர்.அவர் நீதியரசராக இருந்த கால கட்டத்தில் நாங்கள் தொழில் பயின்றோம் என்பதைவிட நல்வாழ்வு வாழ்ந்தோம் என்று சொல்வதுதான் தகும். இன்று 17 ஆண்டுகள் வழக்கறிஞர் தொழிலை நிறைவுசெய்து உள்ளேன்.என்னிடம் பலர் ஜூனியராக உள்ளார்கள்.எனது இல்லத்தரசி நீதிபதியாக பணியாற்றுகிறார். இன்று ஒரு நிலையான வாழ்வை நாங்கள் அமைத்துக் கொள்வதற்கு மாண்புமிகு நீதியரசர் கே. என். பாஷா அவர்கள் நீதியரசர்கள் ஆக இருந்த காலகட்டத்தில் எம்மைப் போன்ற நூற்றுக்கணக்கான இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பேசவைத்து எங்களுக்காக அரசு வழக்கறிஞர்களிடம் வாதிட்டு எங்களின் வழக்கிற்கு வழங்கிய உத்தரவுகளால் நாங்கள் இத்தொழிலில் நிலைபெற வழிவகுத்தார். மாண்புமிகு நீதியரசர் அவர்களைப்போல் நம் உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகள் உருவானால் இன்றைய இளம் தலைமுறை வழக்கறிஞர்கள் தவறான கட்டபஞ்சாயத்துகளுக்கும், காவல் நிலைய வாயிலில் காத்துக் நிக்காமல் சொத்துகளை காலி செய்யும் அன்றாட காய்ச்சிகளாகளாகவும் உருவாக மாட்டார்கள் என்பது திண்ணம்.இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடும் மாண்புமிகு நீதியரசர் அவர்களை நன்றியோடுவணங்கி வாழ்த்துகிறேன்வாழ்க!நீ எம்மான்இவ் வையத்துள்வாழ்வாங்குவாழ்கவே!🙏🙏🙏🙏செந்தமிழ்ச்செல்வன்சி . ஜெயபிரகாஷ் வழக்கறிஞர் ,சென்னை உயர்நீதிமன்றம்💐💐💐💐💐💐💐
ரூ.25 கோடி கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வழக்குத் கொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. July 30, 2021 by Sekar Reporter · Published July 30, 2021
bench comprising justices SM Subramaniam and V Laskshminarayanan concurred with the single judge order and said the punishment imposed cannot be termed as disproportionate or otherwise, as the procedures contemplated under the Tamil Nadu Police Subordinate Service (Discipline and Appeal) Rules, 1955, were scrupulously followed and he participated in the inquiry and admitted guilt before the inquiry officer. The court said the district police took departmental action against Velladurai under Rule 3(b) of Tamil Nadu Police Subordinate Service (Discipline and Appeal) Rules, 1955, on charges that he failed to prevent a heinous crime (murder). As he is uniformed services personnel, the disciplinary authority took serious note of this and conducted an inquiry, during which he admitted to the charges. Based on the report, the disciplinary authority imposed the penalty of reduction in rank by one stage for three years with cumulative effect, but later reduced it to reduction in rank by one stage for two years without cumulative effect December 25, 2023 by Sekar Reporter · Published December 25, 2023