Appointment of noon meal organiser mhc judge parrhiban order notice

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிகளுக்கு நியமனம் செய்யப்படும்போது, தேர்வுக்குழுவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களை சேர்க்காமல் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும்,
தேர்வுக்குழுவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களை சேர்க்கவேண்டும் என்று கோரியும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மேன் இளங்கோ சார்பில் வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்.

மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரரின் சார்பில் ஆர்.நீலகண்டன் வழக்கறிஞர் ஆஜரானார்.

தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்டப்பிரிவு 96 படி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பணி நியமனம் செய்யப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் நியமனக்குழுவில் சேர்க்கப்படுகிறார்கள்.
அதே போன்ற உரிமையை, சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிகளுக்கு நியமனம் செய்ய தேர்வு செய்யும்பொதும் வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கில் மூன்று வார காலத்திற்குள், தமிழக அரசு பதிலளிக்க, நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.if

You may also like...